Tuesday, December 18, 2007

கல்லூரி -- விமர்சனம்

எழுத ஆரம்பிக்கும் போதே சொல்லிவிடுகிறேன்... இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடித்தது என்றும் சொல்ல முடியவில்லை... அதற்காக ஒரு சுமாரான படம் என்றும் ஒதுக்கி விட முடியவில்லை... படத்தில் ஏதோ வித்தியாசமாக இருந்தது. ஆனால், அந்த வித்தியாசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அது தான் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு வரி!! :-)

என்னோட friend Suku சொல்லிக்கொண்டே இருப்பான்... மலையாளப் படங்கள் அளவுக்கு தமிழ்ப்படங்களில் nativity'யையே பார்க்க முடிவதில்லை என்று. அவனைத் திருப்திப் படுத்தும் அளவுக்கு பார்த்தவுடன் ஒரு கிராமத்தை, ஒரு உண்மையான கல்லூரியை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் director Balaji. அந்த வகையில் முதல் பந்திலேயே sixer அடித்துவிடுகிறார். அதற்குப் பின் வரும் எல்லா scenes'ம் 2s & 4s'ஆக அடித்துக் கொண்டு போக முயற்சி பண்ணியிருக்கிறார். அதுவும், ஒவ்வொரு பந்திற்கும் ஒவ்வொரு style'ஆக ஆடும் Sachin'ஐப் போல்!!

முரளி... அவருக்குப் பின் கொஞ்ச நாள்களுக்கு விஜய்... இவர்கள் எல்லாம் college books'ஐத் தூக்கிக் கொண்டு அலைந்த comedy'ஐப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு, இந்த "கல்லூரி" நிச்சயம் ஒரு புது அனுபவம் தான்! கிட்டத்தட்ட, நாம் உண்மையிலேயே college'ல் அடித்த லூட்டிகள், சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், வழிசல்கள், (போடாத?) கடலைகள், etc... (மதியம் round கட்டி உட்கார்ந்து சாப்பிடும் போது, கோக்கன், quarter என்று ஒவ்வொரு வாத்தியார்களாக சபையில் இழுத்துப் போட்டு, டார் டாராகக் கிழிப்போமே... அது மட்டும் தான் இல்லை!!) :-)

Beautiful characterization in the movie. எல்லா charaters'ம் scene'உடன் அவ்வளவு அழகாகப் பொருந்துகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேல் தமன்னா ரொம்ப அழகாக இருக்கிறாள்...(hee hee) நன்றாக நடிக்கவும் செய்கிறாள். script ரொம்ப அற்புதமாக இருந்தது... ரொம்ப அழகான, simple'ஆன introduction of characters. அந்த இரட்டையர்களைப் பற்றி குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.

முத்துவுக்கு தமன்னா மீதான ஈர்ப்பும், அதை மாற்ற அவன் படும் கஷ்டங்களும், பின் அவளைக் காதலிக்க ஆரம்பிப்பதும், மெல்ல மெல்ல தமன்னாவிற்க்கும் அவன் மேல் ஈர்ப்பு வருவதும் உண்மையிலேயே கவிதை தான்!! இது ரொம்ப இயல்பா வந்திருக்கு script'ல. அதாவது கொஞ்சம் உவமையோட சொல்லனும்னா, மொட்டிலிருந்து ஒரு பூ மலருவதை பக்கத்திலேயே இருந்து படம் எடுத்தது மாதிரி!! :-)

இது போக, படிக்கும் ஒவ்வொரு students'ன் குடும்பப் பின்னணியையும் script'ன் flow பாதிக்காமல் சொன்ன விதம் அழகு. சின்னச் சின்ன characters'ம் மனதில் தங்குகிறார்கள். கல் quarry மற்றும் அரசியல்வாதிகளின் பாதிப்பைப் பதிவு செய்ததற்கும் பாராட்டுக்கள்.

படத்தின் art direction'ம், camera'ம் படத்தை வேறொரு தளத்திற்குக் கூட்டிப்போகின்றன. Main lead character, முத்துவின் வீட்டில் sportstar poster'ம்(ஏழை), தமன்னாவின் வீட்டில் அதுவே sportstar book'மாக(வசதி) வித்தியாசம் காட்டியதில் இருந்து, முத்துவின் அம்மா, ஒரு பழைய B&W photo'விலும், தமன்னாவின் அம்மா album'லும் என்பது வரை எவ்வளவு care எடுத்து செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். Cinematography(செழியன்)... wow... அதுவும், அந்த மழை song!! Class!! Joshua Sridhar பாலாஜி சக்திவேலுக்கு மட்டும் நல்ல tunes போடுகிறார். :-) Editing மட்டும் தான் கொஞ்சம் தயை பார்க்காமல், ஒரு 30 min cut பண்ணியிருக்கலாம்!

என்ன செய்வது... படத்தின் இத்தனை +'ஐயும் அந்த ஒரு climax - ஆக்கிவிடுகிறது. எந்த impact'ஐயும் ஏற்படுத்தவில்லை. எனக்குத் தெரிந்து நிறைய பேர் அந்த climax'ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... ஏன்னு கேக்குறீங்களா?? ஒரு scene வரப் போகுதுன்னா, அந்த scene'க்குக் கொஞ்ச நேரம் முன்னாடியே நம்மளை அதுக்கு தயார் பண்ணிடனும்... அதுனால தான் மணிரத்னம் மாதிரி directors படங்கள்ல, பாடல்கள் வர்றதே நமக்குத் தெரியாது... நம்மைத் தயார் படுத்திட்டு, பாட்டு வரப்போகுதுன்னு நாம் feel பண்ணி இந்த இடத்தில் வரும்னு நாம யோசிச்சு வச்சிருக்கிற இடத்தில் வைக்காம கொஞ்சம் தள்ளி வைப்பாங்க. அது மாதிரி தான் climax தான்... அந்த கடைசி 10 நிமிடத்திற்காக நம்மை தயார் செய்வது தான், அதற்கு முன் உள்ள 2 மணி நேரங்களும்... அதிலும் climax'ற்கு அருகில் உள்ள அந்த 20 to 30 min ரொம்ப முக்கியம்... அந்த இடத்தில், படம் எந்த மாதிரி முடிவை ஒரு பார்வையாளன் எதிர்பார்த்து உட்கார்ந்து இருப்பானோ, அதிலிருந்து சிறிது மாறுபட்டு எடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நம் பார்வையாளன் இருப்பான். அதை விட்டுவிட்டு, அப்படியே நேர்மாறாக எடுத்தால், அதற்கு முன் எடுத்த 2 மணிநேரங்களும் மறந்து போகத் தான் வாய்ப்பிருக்கு! அந்த தவறு தான் இந்தப் படத்தில். அதற்கு முன் சில scenes'களில் climax'ஐப் பற்றி ஒன்றிரண்டு hints கொடுத்திருப்பது படம் முடிந்த பின் தான் உணர முடிகிறது. Too late!!

ஆனால் ஒரு சாதாரண பார்வையாளனாக இந்த review'ஐ எழுதாமல், ஒரு நல்ல movies'ஐ வரவேற்பவன் என்ற பார்வையில் இருந்து பார்த்தால், அதற்கு முன் வரும் 2 மணிநேரங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தான் வேண்டும்... அப்படிப் பார்த்தால், இந்தப் படம் உண்மையில் தமிழ் cinema முன்னால் எடுத்து வைத்த இன்னொரு அடி தான்.

Friday, December 14, 2007

டிசம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு...

நம்ம நடுவர்கள் 'வித்தியாசமா' photo எடுக்க சொல்லிட்டாங்கலேன்னு, கொஞ்சம் யோசிச்சு(?), கொஞ்சம் பைசா செலவு பண்ணி, T.Nagar பூக்கடை bazaar'ல இருந்து கொஞ்சம் roses வாங்கிட்டு போய், கூட வேலை செய்யுற colleagues கைல கால்ல விழுந்து, அவங்க தலைல வச்சிக்க சொல்லி, photo எடுத்துப் பார்த்தாத் தான் தெரிஞ்சது... face or parts of face'ஓட எடுத்தாத் தான் foto அழகா வரும்னு! ஆனா அப்போ subject, flower'ஆ இல்லாம face'ஆப் போய்டுமே... So, அதுக்கப்புறமும் கொஞ்சம் யோசிச்சு(அடங்க மாட்டங்குறான் பாத்தீங்களா!!), Ad'லல்லாம், flowers வச்சு, அதை out-of-focus செஞ்சு படம் எடுத்திருப்பாங்களே... அதையே கொஞ்சம் மாத்தி, flower'ஐ focus பண்ணி foto எடுக்கலாம்னு எடுத்தது தான், இந்த முதல் foto. மீதி ரெண்டும் ஊட்டியில்(மன்னிச்சுக்கோங்க நடுவர்களே... உண்மைலயே, போன மாசம் தான் ஊட்டி போய்ட்டு வந்தேன்) எடுத்தது.

முதல் இரண்டு படங்களும் போட்டிக்கு... (Fotos'ஐ click'க்கி, பெரியதாக்கிப் பார்க்கவும். எனது blog backround color'க்கு fotos நல்லா தெரியாது)

http://www.flickr.com/photos/ursathi/2108689407/
Originally uploaded by ursathi



>

ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கக் கூடாது?

ஆரம்பிக்கும் முன்பே சொல்லி விடுகிறேன்... நான் BJP ஆதரவாளனோ, hindutva'வின் மேல் பிடிப்புள்ளவனோ கிடையாது. சொல்லப் போனால், சில நாள் முன்பு எனக்கு வந்த ஒரு forwarded mail'க்கு reply அடிக்கும் போது கூட, நான் மோடியின் கோத்ரா riot'ஐ வன்மையா எதிர்க்கிறேன் என்றும் கூட சொல்லியிருந்தேன். So, இதை மனதில் வைத்து இந்த கட்டுரையைப் படிக்கவும்.

சரி... இப்பொழுது மோடி செய்வது என்ன என்று பார்க்கலாம். Hindutva'வை வைத்து, அதாவது மதத்தை வைத்து, அரசியல் பண்ணுகிறார் என்பது தானே media உட்பட எல்லா அரசியல்வாதிகளும் மோடி மேல் சொல்லும் குற்றச்சாட்டு?

அப்படிப் பார்த்தால், மற்ற அரசியல்வாதிகள் ஜாதிகளை வைத்து அரசியல் செய்வது போல் தானே இதுவும்? வன்னியர்களுக்காக மட்டுமே ஒரு கல்லூரியை நடத்துவதை பெருமையாகப் பேசுகிறார் ராமதாஸ். பகத்சிங்கின் ஜாதிக்காரர்கள் யாரும் தமிழ்நாட்டில் வாழாததால், பசும்பொன் தேவர்க்கு மட்டும் விழா எடுக்கிறார்கள் கலைஞரும் அம்மாவும். இது தமிழ்நாட்டில் மட்டும் நின்று விடவில்லை. தலித்களுக்கு ஆதரவாளராக காட்டிக்கொள்ள மாயாவதி உ.பி-யில் கஷ்டப்படுகிறார்(?) பீகாரில் குறிப்பிட்ட ஜாதிக்காரர்களின் ஆதரவாலேயே மறுபடி மறுபடி வெற்றி கண்டார் லல்லு. இப்படி புற்றீசல் போல், இந்தியா முழுவதும் ஜாதியை வைத்துத் தான் அரசியல் பண்ணுகிறார்கள்.

எல்லோரும் ஜாதியை வைத்து மக்களைப் பிரிக்கிறார்கள் என்றால் மோடி மதத்தை வைத்துப் பிரிக்கிறார். அவ்வளவு தானே வித்தியாசம்?? huh ...??

மறுபடியும் சொல்கிறேன்... நான் மோடி செய்ததை நியாயப் படுத்தவில்லை. ஆனால், எல்லா அரசியல்வாதிகளும் அவர் செய்வதைத் தான் கொஞ்சம் வேறு மாதிரி செய்கிறார்கள். பின் ஏன் மோடிக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு? என்ன மற்றவர்கள் மாட்டிக்கொள்ளாத வகையில் செய்வதை மோடி மாட்டிக்கொள்ளும் வகையில் செய்து விட்டார்.

இதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், மோடி உண்மையிலேயே சிறந்த நிர்வாகி... தனது அரசாங்கத்தில் ஊழல் பேர்வழிகளுக்கு இடம் கொடுக்கவில்லை, அதனாலேயே கட்சிக்குள் எதிர்ப்பு நிறைய கிளம்பியும் கூட. "Gramin"ங்கிற திட்டத்தால, எல்லா கிராமங்களுக்கும் power supply கிடைத்திருக்கிறது. தொழில்துறை முன்னேற்றத்தில் இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக இருக்கிறது குஜராத். அடுத்தது ரொம்பவும் முக்கியமான point. தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறார். Afsal Guru பற்றி தைரியமாக கேள்வி கேட்கிறார். 4 மாநிலங்களில் தேடப்பட்ட குற்றவாளி, Shorabudhin Sheik'ஐப் போட்டுத் தள்ளியது பற்றி தைரியமாகப் பேசுகிறார். கடந்த முறை ஊழல் புரிந்தவர்களுக்கு இந்த முறை தேர்தலில் seat கொடுக்கவில்லை. etc...

அரசியல் என்னும் சாக்கடையில் மோடி உட்பட எல்லா மட்டைகளும் ஒரே குட்டையில் ஊறி இருக்கும் போது, இலவச TV போன்ற கவர்ச்சிகளை நம்பாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மோடி மாதிரி ஒரு CM'ஐ ஏன் ஆதரிக்கக் கூடாது என்பது தான் என் கேள்வி. கோத்ரா வன்முறை உண்மையிலேயே கண்டிக்கத் தகுந்தது தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், திரும்பத் திரும்ப அதைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. அப்படிப் பார்த்தால், Congress'ஐப் பற்றி பேசும்போது இன்னும் சீக்கிய வன்முறைகளைத் தான் பேச வேண்டும். தி.மு.க பற்றிப் பேசினால், சர்க்காரியா ஊழலைத் தான் பேச வேண்டும். லல்லு கூடத்தான் பீகாரை சீரழித்தார். ஆனால் அதற்காக, அதன் பின், railway துறையை profit'ல் போக வைத்ததைப் பெருமையாகப் பேசவில்லையா? அதுபோல் ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் மோடிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க கூடாது?

இவ்வளவு நாளும், "why we should not support Modi."னு fullstop'ஓடு பேசிக்கொண்டிருந்த நான் இப்பொழுது, "why shouldnt we support Modi?"னு question mark'ஓடு நிறுத்துகிறேன். எடுத்த எடுப்புலையே, 'நீ துக்ளக் படிக்கிறவன். இப்படித் தான் பேசுவ'ன்னு சொல்லாம, கொஞ்சம் தர்க்கரீதியா யோசிச்சுட்டு, அப்புறம் reply பண்ணுங்க.... okay'ஆ? இதை ஒரு open debate'ஆக வைக்கிறேன். உங்கள் comments'ஐ மறக்காமல் பதிவு பண்ணிட்டு போங்க... நீங்க reply'ல குறிப்பிடுற கருத்துக்கள் logical'ஆ இருந்தா, என்னோட இந்த question mark'ஐ மறுபடி fullstop'ஆக மாற்றிக்கொள்ள நான் எப்பவும் தயார்.

Tuesday, December 11, 2007

எவனோ ஒருவன் -- விமர்சனம் அல்ல

இந்தப் படத்திற்கு நான் விமர்சனம் எழுதவில்லை. இந்தப் படம் பார்த்து விட்டு வெளியில் வந்தவுடன் எனக்கு எழுந்த முதல் கேள்வி இந்தப் படத்திற்கு ஏன் 34 awards என்று தான்.

Camera ரொம்ப அழகாக இருந்தது... அதுவும் நிறைய scenes side lighting தான். (முகத்தின் ஒரு பகுதி மட்டும் தான் lighting இருக்கும்.) ஒரு best shot என்று கூட சொல்லலாம்... மாதவன் அந்த படம் வரையும் பையனுடன் இரவில் பேசும் scene'ன் அந்த camera angle'ஐ... Just Class!! :-) (அந்த இடத்தில் வசனங்களும் ரொம்ப அருமை)

மற்றபடி இந்தப் படத்தின் script ரொம்பவும் வித்தியாசமான ஒரு script'ஆக எல்லாம் எனக்குத் தோனவில்லை. நாம் GentleMan'லிருந்து அந்நியன் வரை பார்த்துப் பழகிவிட்ட ஒரு script தான். என்ன ரொம்பவும் யதார்த்தமான script. அந்த மாதிரி ஒரு situation யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் அந்த மாதிரி react பண்ணலாம். அது ஒன்று தான் படத்தின் பலம்.

சில விஷயங்களை, நாம் கண்டும் காணாமல் விட்டு விடும் விஷயங்களைப் பற்றி, படம் எடுத்ததற்காக இயக்குனர்க்குப் பாராட்டுகள். இது தான் இந்தப் படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டிய விஷயம். இன்றைய தினமணியில் ஒரு தலையங்கம்... "பெரிய level'ல் நடக்கும் ஊழல்கள் எல்லா நாடுகளிலும் உள்ளன. ஆனால், சிறு சிறு level'ல் traffic police'லிருந்து RTO office வரை நடக்கும் ஊழல்களால் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப் படுவதால் தான் அவை பெரிதாகத் தெரிகின்றன." அப்பட்டமான உண்மை. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிப் பார்த்தால், நாமும் எவ்வளவோ இடத்தில் நமக்கு ஏற்ற மாதிரி law'ஐ adjust செய்து கொள்ளப் பழகிவிட்டோம் என்று கூட சொல்லலாம். அது தான் 'No parking' sign இருந்தும் park பண்ணுவது, etc. Traffic signal'ல் red இருந்தால் கூட தாண்டிப் போவது போல்... இல்லாவிட்டால் பின்னால் வரும் தண்ணி lorry'ல் அடிபட்டு சாக வேண்டும். நம்மை விட பலசாளியிடம் இருந்து தப்ப நாமும் தப்பு பண்ண வேண்டியிருக்கிறது.

இதற்கெல்லாம் எதிராக ஒருவன் கிளர்ந்தெழுந்தால் (real life'லும்) என்னவாகும் என்பது தான் இந்தப் படம். As a movie'ஆக இதை என்னால் ஒரு சிறந்த படமாக ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு நல்ல கருத்தை சொல்லிய படம் என்ற பார்வையில் உண்மையில் இதுவும் ஒரு நல்ல படமே...

ஆனால் படம் பார்த்த எத்தனை பேருக்கு இது தவறு என்று புரியப்போகிறது என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் தவறு செய்பவர்கள் நாம் தானே! நம்மை பற்றிய தவறுகளை நாம் எப்போது ஒப்புக்கொண்டோம்? உண்மையில் theatre'க்கு வந்தவர்களும் சில scenes'ல் maddy loose தனமாக நடப்பதாகத் தான் கத்தினார்கள். ஏன்... இவ்வளவு பேசும் நானும் கூட அப்படித்தான் யோசித்தேன். என்ன ஒரே ஒரு வித்தியாசம்.. கத்தவில்லை. யோசிக்க மட்டும் செய்தேன்... யோசித்தேன் என்றால், maddy செய்வது சரி என்று தான் எனக்கும் படுகிறது... ஆனாலும், அதை ஏன் loose தனம் என்று எனது practical mind சொல்கிறது என்றும் யோசித்தேன்.

உண்மையில் இப்படி ஒரு life வாழ்வதற்காக நாம் எவ்வளவு compromise செய்ய வேண்டியிருக்கிறது? இதற்கான மாற்றம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்வி தான் எல்லார் மனதிலும் வழக்கமாக எழுவது... Atleast, நாம் நம் அளவில் சரியாக இருக்கலாமே... நம்மால் முடிந்த அளவிற்கு... தண்ணி lorry'ல் அடி படாத அளவிற்கு! மாற்றம் தானாக நடக்கும் என்று தான் தோன்றுகிறது.

Saturday, December 08, 2007

பொல்லாதவன் -- விமர்சனம்

சில படங்களை அதிக expectations'னோடு பார்க்கப் போவோம். சுத்தமாக ஊற்றிக் கொள்ளும். சிலவற்றை friends யாராவது நல்லா இருக்குன்னு சொன்னதால பார்க்கப் போவோம்.எதிர்பாராத ஆர்ச்சரியங்கள் காத்திருக்கும். முதலாவதற்கு eg ராமேஸ்வரம். இரண்டாவதற்கு இந்தப் படம்.Correct'ஆக சொல்லப்போனால் இந்தப் படத்திற்குப் போகலாம் என்று கடைசி நிமிடத்தில் தான் முடிவெடுத்தேன். So, title card வேறு miss ஆகி விட்டது. படம் முடிந்து வெளிவரும் பொழுது, கொஞ்சம் சீக்கிரம் படத்திற்கு வந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்தது என்னவோ உண்மை. :-)

இந்தப் படத்தை எல்லாரும் Bicycle thieves உடன் compare பண்ணினார்கள். ஆனால் City of God உடன் compare பண்ண வேண்டிய படம் இது. (புதுப்பேட்டை படத்திற்கும் City of God'ற்கும் சம்பந்தமே கிடையாது. புதுப்பேட்டை முற்றிலும் புதிய கோணத்தில் எடுக்கப் பட்ட படம். Gangsters பற்றிய படம் என்றாலே City of God என்றால், City of God'ஐயும் God Father உடன் தான் compare பண்ண வேண்டும்)

பொல்லாதவனின் கதை City of God மற்றும் Bicycle Theives இரண்டையும் சேர்த்து எடுக்கப் பட்டது. கொஞ்சம் Munich touch கூட இருந்தது. படத்தின் base story Bicycle theives. இடையில் வரும் சம்பவங்களுக்கு inspiration City of God. கடைசியில் அவர்கள் குடும்பத்திற்கு வந்த பயத்தைக் காட்டும் பொழுது inspiration Munich.ஒரு gangster movie'ஐ கொஞ்சம் lively'ஆக எடுத்த விதத்திற்காக director வெற்றிமாறனுக்கு பாராட்டுகள். அதுவும் தனுஷ் bike'ஐத் தொலைத்து விட்டு, அதை கண்டெடுக்கப் போகும் இடங்களெல்லாம் ஒரு உண்மையான gansters இடத்திற்குத் தான் வந்து விட்டோமோ என்ற எண்ணத்தை வரவழைத்து விடுகிறது. மதுரையில் படிக்கும் போது எனது wallet'ஐத் தொலைத்து விட்டு ஒரு அசட்டு தைரியத்தில் நண்பன் Suku'வையும் கூட்டிக்கொண்டு திடீர் நகருக்குள் நுழைந்தது தான் ஞாபகம் வந்தது. :-)

Director வெற்றி மாறன், BaluMahendra'வின் assistant'ஆம். Camera'ஐப் பார்த்தாலே தெரிந்தது. ரொம்ப different angles, ரொம்ப different'ஆன movements. படத்தின் starting'ல் தனுஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் scene'ல் camera'வும் ஆடிக்கொண்டே இருக்கும். இது போக சில இடங்களில் கண்ணுக்கு உறுத்தாத camera shakes. ie: light'ஆக scene இடம்வலமாக ஆடிக்கொண்டிருக்கும் அல்லது handheld camera'வாக இருக்கும். தனுஷ் தப்பித்து ஓடும் அந்த குறுக்கு சந்தில் எவ்வளவு தூரம் continuous shot என்று கவனித்தாலே cinematography'க்கு டைரக்டர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். ரொம்ப natural lighting வேறு. ஒரு Counsiler'இன் கொலையை இவ்வளவு beautiful'ஆகவும் எடுக்க முடியுமா!! camera'வைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் தான் தெரிகிறது. நிறைய scenes, ie: 1 or 2 seconds'ல் வந்து போய் விடக்கூடிய scenes'க்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று. காக்க காக்க இளா அண்ணனைக் கொல்லும் அந்த scene... அப்பா... உண்மையில் இப்படி எல்லாம் camera'வை handle செய்ய முடியுமா என்ன!! பிறகு அந்த கடைசி fight... வெறும் Frames per second'ஐ வைத்துக் கொண்டு graphics effect கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த red tone படத்தின் உண்மையான நிறத்தைச் சொல்கிறது. இப்பொழுது தமிழ் film industry technical aspect'ல் ரொம்ப முன்னேறி விட்டது. எனவே மணிரத்னம், செல்வராகவன் மாதிரி directors படம் எடுத்தால் தான் cinematography'ல் வித்தியாசம் காண்பிக்க முடிகிறது. அந்த வித்தியாசத்தை வெற்றி மாறனும் காட்டி இருக்கிறார்.

Music G.V. Prakash... பாடல்கள் எனக்குப் பிடிக்கவில்லை. Already MSV கலக்கி எடுத்த பாடலை அவரை விடவும் நன்றாகபோடுவதென்பது முடியாத காரியம் தான். ஆனால் re-recording நன்றாக இருந்தது. முக்கியமாக அந்த ganster leader பேசும் போதெல்லாம் அடக்கி வாசித்தது...!

Dialogues & Audiography ரொம்பவும் அருமை. நாம் normal'ஆக கேட்காத dialogues. "அந்த கண்ணால என்னைப் பார்க்காதடா"னு சொல்லிக்கொண்டே கண்ணைக் குத்துவது... தனுஷின் சிறு சிறு love dialogues. ரொம்ப யதார்த்தமாக இருந்தது.

Editor யாரு.. Sreegar Prasad'ஆ? படத்தின் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விஷயம். முடிந்த வரை காதலைத் தவிர்த்து Gansters'ஐப் பற்றி கதையை நகர்த்திச் சென்ற விதம் அற்புதம். என்ன, யோசிக்காமல் பாடல்களையும் கத்திரி போட்டிருக்கலாம். ரொம்பவும் odd'ஆகத் தெரிகிறது. Moreover, படத்திற்குத் தேவையும் இல்லை.

இந்தப் படத்தில் மிகவும் கவர்ந்த விஷயம்... அதன் fast paced script தான். அங்கங்கே பாடல்கள் வந்து இம்சை கொடுத்தாலும், அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், ஒரு அற்புதமான script. அதுவும் இன்னொரு beauty... love scens தவிர்த்து விட்டுப் பார்த்தால் தனியாக ஒரு script. அதை சேர்த்துப் பார்த்தால் கூட கெடாத script. (inspiration தான் என்றாலும்) படத்தின் main characters இருவரும் மாறி மாறி கதை சொல்வது முற்றிலும் புதிய கோணம்.

படத்திற்கு முதலில் "TN 01 1386" என்று தலைப்பு வைத்திருந்தார்களாம். நமது தமிழக அரசின் லூசுத்தனமான சட்டத்தினால், பொல்லாதவனாகி, just ஒரு தனுஷ் படம் போல் மாயை உருவாகிவிட்டது. இந்த மாதிரி நல்ல படங்களுக்காகவாவது rule'ஐத் தளர்த்தலாம்.