Wednesday, October 10, 2007

உணவுப் பொருட்கள் - Oct 2007 PIT போட்டிக்கு

Ref: http://photography-in-tamil.blogspot.com/2007/09/pit_30.html

முதல் இரண்டும் போட்டிக்கு...

ம்... முதல்ல நம்ம ஊரு இட்லி...




















இரண்டாவது, அழகாக அடுக்கி வைக்கப் பட்ட நெல்லிக்காய்.



இனி வருபவை பார்வைக்கு...

வெள்ளறி...















ஆப்பிள்





















மாதுளை



















திராட்சை






















இளநீர்






















தோசை

























கொத்து பரோட்டா - Before





















கொத்து பரோட்டா - After





















Halfboil





















அடுத்து Poha - Maharashtra உணவு




















Shira - Maharashtra உணவு


















சாபூதானா வடை - Maharashtra உணவு






















Baakri ரொட்டி - Maharashtra உணவு

Monday, October 08, 2007

கற்றது தமிழ் -- கற்றது படம்

சில நாட்கள் முன்பு என் நண்பன் Suku'ம் நானும் பேசிக்கொண்டிருந்தோம். Software industry'ன் இந்த அபரிமிதமான வளர்ச்சி எங்கு கொண்டு போய் விடும் என்று! இந்த படத்திலேயே ஒரு dialogue வரும்... "முந்தில்லாம் சென்னை மாதிரி நகரத்துல குறைந்த பட்ச வருமானம் 2,000 ரூபாய், அதிகபட்சம் 20,000. இப்போ, குறைந்த பட்ச வருமானம் அதே 2,000 தான், ஆனா அதிகபட்சம் 200,000".இந்த dialogue தான் படத்தின் கதை, theme எல்லாமே.


இந்த படத்தின் Script பற்றி சொல்ல வேண்டுமானால் -ve aspect'ல் 'குழப்பமான' என்று சொல்லலாம்... அல்லது +ve aspect'ல் 'brilliant'ஆன என்றும் சொல்லலாம். :-) முதலில் Flashback போல் ஆரம்பித்து, பின் அந்த flashback ஆரம்பித்த இடத்தில் இருந்தே மறுபடி கதையைத் தொடர்ந்து(Flashback'கிற்குள் Flashback!), அதன் பின் Flashback & current incidents என்று மாற்றி மாற்றி காட்டி, மறுபடி அந்த தொடர்ந்த இடத்திற்க்கே வந்து முடிப்பது, தமிழ் cinema'விற்க்குப் புதுசு. ஒரு இரண்டு வார்த்தை பக்கத்தில் திரும்பி பேசினால், கதையின் தொடர்ச்சி புறிபடாமல் போவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். இதற்குப் பக்க பலமாய் இருப்பது characterisation.

ஜீவாவின் charater தான் படத்தின் உயிர் நாடியே. பொதுவாக நான் reviews எழுதும் போது, நடிப்பு பற்றி எழுதுவது இல்லை. ஆனால் இங்கு என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. ஜீவாவின் நடிப்பு நிச்சயம் அவரை ஒரு புது தளத்திற்க்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதுவும் ஒரு BPO பையனைப் பிடித்து வைத்துக் கொண்டு அவர் போதும் ஆட்டம்.. wow!! அடுத்து அஞ்சலி... புதுமுகமாம். சூடம் அடித்தால் கூட நம்ப முடியாது. :-) (I fell in love with her... know???) :-) அப்புறம், அந்த குட்டிப் பையனை விட, அந்த குட்டிப் பெண் ரொம்ப கவர்கிறாள். "நெசமாத் தான் சொல்றியா?" என்று மறுபடி எப்பொழுது கேட்பாள் என்று ஏங்க வைக்கும் நடிப்பு!! :-) படத்தில் மற்றொரு குறிப்பிட்டு சொல்ல வைக்கும் பாத்திரம் தமிழ் வாத்தியாராய் வரும் அழகம் பெருமாள். புதுப்பேட்டைக்குப் பின் மற்றொரு அழகான role. மனுசர் சும்மா பூந்து விளையாடிட்டார்.

இவர்கள் அத்தனை பேரின் charaterisation'ம் அருமை. ஜீவாவிற்க்குள் குடிகொண்ட முரட்டுத் தனத்தை(அல்லது இயலாமையை) முழுவதும் justify பண்ண முடியாததெனினும், அதற்க்காக முயன்றதுக்குப் பாராட்டலாம். கமல், KB படங்களைப் போல் சின்ன சின்ன charaters'ஐயும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் ராம்(director). அந்த roommates, doctor, BPO guy, etc.

பொதுவாக பாடல்கள் ஒரு படத்தின் வேகத்தைக் குறைப்பவையாகவே கருதப்படுவதுண்டு. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. Script எழுதி முடித்த பின் தான் வியாபார நோக்கத்திற்க்காகப் பாடல்களைப் புகுத்துவார்கள். இந்த படத்தில் அந்த மாதிரி எதுவுமே கிடையாது. பாடல்கள் அவ்வளவு அழகாக script உடன் இணைந்திருக்கின்றன. சொல்லப்போனால், பாடல்களைத் தூக்கி விட்டால், script முழுமையே அடையாது. :-)

சில(சொல்லப்போனால் பல) scenes எல்லாம் உண்மையிலேயே room போட்டுத் தான் யோசித்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கின்றன. முதலில் படம் ஆரம்பிக்கும் போதே இது மற்ற படங்களைப் போல் இல்லை, என்னமோ வித்தியாசமாய் இருக்கிறது என்பது புரிந்து போய் விடுகிறது. அந்த வித்தியாசத்தை இறுதி வரை கொண்டு போனதே director'ன் வெற்றி தான்.

"வாழ்க்கைல நிறைய சின்ன சின்ன அழகான விஷயங்கள் நாம கவனிக்காமலே நம்மளை விட்டு கடந்து போய்டுது" போன்ற அழகான வசனங்கள் படத்தின் மற்றொரு முக்கியமான பலம்.

தமிழ் cinema industry'யில் இளையராஜா, ARR'க்கு அடுத்து Re-recording'ல் பட்டையைக் கிளப்புவது யுவன் தான்(நல்ல directors அமைந்தால்!!). So, இந்த படமும் miss ஆகவில்லை. பாடல்கள், அதில் instruments கையாண்ட விதம் எல்லாம் இளையராஜாவையும் ARR'ஐயும் கலந்து கொடுத்தது போல் இருந்தது. "பறபற பட்டாம்பூச்சியும்", "பறவையே எங்கு இருக்கிறாயும்" மனத்தை விட்டு அகல மறுக்கின்றன.

Director ராம், Balu Mahendra'வின் assistant என்பது cinematography'வைப் பார்த்தாலே தெரியும். கதிர் என்னும் cinematographer. நானும் தான் Maharashtra போனேன், Rajasthan போனேன். ஆனால் இந்த மாதிரி இடங்களை எங்கு தான் பிடிக்கிறார்களோ... என்று தான் முதலில் நினைத்தேன். பின்பு தான் புரிந்தது. அது, பார்க்கும் பார்வையில் மட்டும் இல்லை. படம் பிடிக்கும் camera'வும், camera'வைப் பிடிக்கும் கையும் காரணங்கள் என்று! :-)

Editing -- Sreekar Prasad. இந்த மாதிரி, கொஞ்சம் குழப்பமான script'க்கு இந்த மாதிரி தேர்ந்த editor இருந்தால் தான் வேலைக்காகும். ஆனால் climax'ன் கடைசி 20 min'ஐத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கத்திரி போட்டிருந்தால், படம் 'ரொம்ப' அழகான படமாக வந்திருக்கும்.இப்பொழுதோ, director புலம்புவது போல் ஆகி விட்டது. அந்த bus'ல் இருவரும் செல்லும் போதே முடிததிருக்கலாம்.

சில இடங்களில் ரொம்ப apt'ஆன editing with the song sequences. ஜீவா ஒரு disappointed state'ல் அஞ்சலியை cycle'லில் கூட்டி வருவார். ஒரு இடத்தில் support'காக ஜீவாவின் தோளைப் பிடிப்பாள்... உடன் "முதல் முறை வாழப் பிடிக்குதே" என்ற lines வரும். "முதல் முறை வெளிச்சம் பிறக்குதே" என்ற lines வரும் பொழுது, அந்த train ஒரு இருண்ட tunnel'லில் இருந்து வெளியே வரும்.
ஜீவா வளர்ந்த பின், எல்லா hostel மாணவர்களும், bag எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்புவார்கள். அது 12-ம் வகுப்பு என்பது, பின்னால் கொஞ்சம் out of focus'ல் இருக்கும் கதவில் எழுதி இருக்கும் 12A'ஐ வைத்துக் கண்டு பிடிக்கலாம். இது போல் இன்னும் நிறைய scenes.... நிறைய எழுத வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால், அவ்வளவையும் எழுதினால் இன்னும் இரண்டு பக்கத்திக்கு மேல் வேண்டும்.

மொத்தத்தில், climax-ல் கடைசி 20 நிமிடம் தேவையில்லை என்றாலும், script'காக இன்னொரு முறை பார்க்கணும். Cinematography'க்காக மற்றொரு முறை பார்க்கணும். Re-recording'காக மற்றொரு முறை பார்க்கணும். Editing'காக மற்றொரு முறை பார்க்கணும். கடைசியாக Anjali'காக கட்டாயம் மற்றுமொரு முறை பார்க்கணும். :-)