Showing posts with label நரேந்திர மோடி. Show all posts
Showing posts with label நரேந்திர மோடி. Show all posts

Friday, December 14, 2007

ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கக் கூடாது?

ஆரம்பிக்கும் முன்பே சொல்லி விடுகிறேன்... நான் BJP ஆதரவாளனோ, hindutva'வின் மேல் பிடிப்புள்ளவனோ கிடையாது. சொல்லப் போனால், சில நாள் முன்பு எனக்கு வந்த ஒரு forwarded mail'க்கு reply அடிக்கும் போது கூட, நான் மோடியின் கோத்ரா riot'ஐ வன்மையா எதிர்க்கிறேன் என்றும் கூட சொல்லியிருந்தேன். So, இதை மனதில் வைத்து இந்த கட்டுரையைப் படிக்கவும்.

சரி... இப்பொழுது மோடி செய்வது என்ன என்று பார்க்கலாம். Hindutva'வை வைத்து, அதாவது மதத்தை வைத்து, அரசியல் பண்ணுகிறார் என்பது தானே media உட்பட எல்லா அரசியல்வாதிகளும் மோடி மேல் சொல்லும் குற்றச்சாட்டு?

அப்படிப் பார்த்தால், மற்ற அரசியல்வாதிகள் ஜாதிகளை வைத்து அரசியல் செய்வது போல் தானே இதுவும்? வன்னியர்களுக்காக மட்டுமே ஒரு கல்லூரியை நடத்துவதை பெருமையாகப் பேசுகிறார் ராமதாஸ். பகத்சிங்கின் ஜாதிக்காரர்கள் யாரும் தமிழ்நாட்டில் வாழாததால், பசும்பொன் தேவர்க்கு மட்டும் விழா எடுக்கிறார்கள் கலைஞரும் அம்மாவும். இது தமிழ்நாட்டில் மட்டும் நின்று விடவில்லை. தலித்களுக்கு ஆதரவாளராக காட்டிக்கொள்ள மாயாவதி உ.பி-யில் கஷ்டப்படுகிறார்(?) பீகாரில் குறிப்பிட்ட ஜாதிக்காரர்களின் ஆதரவாலேயே மறுபடி மறுபடி வெற்றி கண்டார் லல்லு. இப்படி புற்றீசல் போல், இந்தியா முழுவதும் ஜாதியை வைத்துத் தான் அரசியல் பண்ணுகிறார்கள்.

எல்லோரும் ஜாதியை வைத்து மக்களைப் பிரிக்கிறார்கள் என்றால் மோடி மதத்தை வைத்துப் பிரிக்கிறார். அவ்வளவு தானே வித்தியாசம்?? huh ...??

மறுபடியும் சொல்கிறேன்... நான் மோடி செய்ததை நியாயப் படுத்தவில்லை. ஆனால், எல்லா அரசியல்வாதிகளும் அவர் செய்வதைத் தான் கொஞ்சம் வேறு மாதிரி செய்கிறார்கள். பின் ஏன் மோடிக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு? என்ன மற்றவர்கள் மாட்டிக்கொள்ளாத வகையில் செய்வதை மோடி மாட்டிக்கொள்ளும் வகையில் செய்து விட்டார்.

இதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், மோடி உண்மையிலேயே சிறந்த நிர்வாகி... தனது அரசாங்கத்தில் ஊழல் பேர்வழிகளுக்கு இடம் கொடுக்கவில்லை, அதனாலேயே கட்சிக்குள் எதிர்ப்பு நிறைய கிளம்பியும் கூட. "Gramin"ங்கிற திட்டத்தால, எல்லா கிராமங்களுக்கும் power supply கிடைத்திருக்கிறது. தொழில்துறை முன்னேற்றத்தில் இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக இருக்கிறது குஜராத். அடுத்தது ரொம்பவும் முக்கியமான point. தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறார். Afsal Guru பற்றி தைரியமாக கேள்வி கேட்கிறார். 4 மாநிலங்களில் தேடப்பட்ட குற்றவாளி, Shorabudhin Sheik'ஐப் போட்டுத் தள்ளியது பற்றி தைரியமாகப் பேசுகிறார். கடந்த முறை ஊழல் புரிந்தவர்களுக்கு இந்த முறை தேர்தலில் seat கொடுக்கவில்லை. etc...

அரசியல் என்னும் சாக்கடையில் மோடி உட்பட எல்லா மட்டைகளும் ஒரே குட்டையில் ஊறி இருக்கும் போது, இலவச TV போன்ற கவர்ச்சிகளை நம்பாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மோடி மாதிரி ஒரு CM'ஐ ஏன் ஆதரிக்கக் கூடாது என்பது தான் என் கேள்வி. கோத்ரா வன்முறை உண்மையிலேயே கண்டிக்கத் தகுந்தது தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், திரும்பத் திரும்ப அதைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. அப்படிப் பார்த்தால், Congress'ஐப் பற்றி பேசும்போது இன்னும் சீக்கிய வன்முறைகளைத் தான் பேச வேண்டும். தி.மு.க பற்றிப் பேசினால், சர்க்காரியா ஊழலைத் தான் பேச வேண்டும். லல்லு கூடத்தான் பீகாரை சீரழித்தார். ஆனால் அதற்காக, அதன் பின், railway துறையை profit'ல் போக வைத்ததைப் பெருமையாகப் பேசவில்லையா? அதுபோல் ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் மோடிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க கூடாது?

இவ்வளவு நாளும், "why we should not support Modi."னு fullstop'ஓடு பேசிக்கொண்டிருந்த நான் இப்பொழுது, "why shouldnt we support Modi?"னு question mark'ஓடு நிறுத்துகிறேன். எடுத்த எடுப்புலையே, 'நீ துக்ளக் படிக்கிறவன். இப்படித் தான் பேசுவ'ன்னு சொல்லாம, கொஞ்சம் தர்க்கரீதியா யோசிச்சுட்டு, அப்புறம் reply பண்ணுங்க.... okay'ஆ? இதை ஒரு open debate'ஆக வைக்கிறேன். உங்கள் comments'ஐ மறக்காமல் பதிவு பண்ணிட்டு போங்க... நீங்க reply'ல குறிப்பிடுற கருத்துக்கள் logical'ஆ இருந்தா, என்னோட இந்த question mark'ஐ மறுபடி fullstop'ஆக மாற்றிக்கொள்ள நான் எப்பவும் தயார்.