Thursday, November 29, 2007

LTTE'இன் அராஜகம் தொடர்கிறது...

LTTE'க்கு support செய்யும் மக்களே.... கொஞ்சம் இந்த news'ஐயும் பாக்குறீங்களா?

20 killed in Colombo blasts

Blast shows change in LTTE tactics

எனக்கு ஒன்று தான் புரியவில்லை... அது என்ன... LTTE உடன் நடக்கும் சண்டையில் Srilankan govt bomb போடும் பொழுது தமிழர்கள் இறந்தால் மட்டும் மல்லுக்கட்டும் LTTE ஆதரவாளர்கள் இந்த மாதிரி LTTE'இன் retaliation attack'ஆல் civilians இறந்தால் மட்டும் மௌனமாக இருப்பது ஏன்? எல்லா உயிரும் உயிர் தானே? அப்பாவி சிங்களர்கள் இறந்தால் அதைப் பற்றி கவலை இல்லையா?

LTTE ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கம்(தமிழர்களுக்கும் சம உரிமை வேண்டும்) நல்லதாக இருந்தாலும், போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, தனி ஈழம் என்ற வறட்டுப் பிடிவாததிற்க்கும், அரசியல் பழிவாங்குதல்களுக்கும், தனக்கு வேண்டாதவர்களைப் போட்டுத் தள்ளவும், சிறுவர்கள் கையிலும் ஆயுதங்களைக் கொடுக்கவும் என்று தடம் புரண்டது தான் மிச்சம்.

ராஜீவ் காந்தியைக் கொன்று, (அவர் ஒன்றும் காமராஜர் போல் உத்தமர் இல்லையெனினும்) அதன் மூலம் இந்தியாவில் எப்பொழுதும் நிலையில்லா அரசுகளை ஏற்பட வைத்து, இந்தியாவின் வளர்ச்சியை சில வருடங்கள் பின்னோக்கித் தள்ளிய LTTE'க்கு கவிதையாம், poster'ஆம்... கருமம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!!

சிங்கள அரசுக்கு இருப்பது(இருந்தது?) மட்டும் இனவெறி அல்ல... தமிழ், தமிழர் என்று சொல்லி அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் LTTE'க்கும், அதன் supporters'க்கும் இருப்பது கூட இனவெறி தான்! கேட்டால் கலைஞர் போல், "இனவெறி தமிழுக்கு என்றால் வரவேற்போம்" என்பார்கள்... சுஜாதா பாணியில் சொல்வதானால், மனிதத்தை விட தமிழ் உயர்ந்தது என்று நினைக்கும் இவர்களைப் பசித்த 'புலி' உண்ணட்டும்.

No comments:

Post a Comment