Friday, June 22, 2007

Sivaji -- The so called Action-packed movie

முதலில் இந்த படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டுமா என்று தான் நினைத்து இருந்தேன். ரஜினி படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை என்றால் தமிழ்நாடு தான் என்னை மன்னிக்குமா? ;-)

சிவாஜி - உண்மையில் பேரைக் கேட்டால் அதிராத்தான் செய்கிறது, திரையரங்கும். இந்த வயதிலும் என்ன style! Wow!!

என்னைப் பொருத்த வரை ஷங்கரை பெரிய director'ஆக நான் ஒததுக்கொள்ள மாட்டேன். இந்தியன், முதல்வன் மட்டும் விதிவிலக்கு. எல்லோரும் JentleMan'ஐ சிறந்த படம் என்பார்கள். அந்த நேரத்தில் வந்த ஒரு வித்தியாசமான படம் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய அதை இந்த list'ல் சேர்க்க முடியாது. அந்த இரண்டு படங்களிலும் இந்தியனில் கமல்ஹாசனின் கைவண்ணம் நிச்சயம் இருந்து இருக்கும். முதலவன் சுஜாதாவின் 'பதவிக்காக' நாவலின் சிறிது மாற்றி எடுக்கப் பட்ட கதை. ஆனாலும் இரண்டு விஷயங்களை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். ஷங்கர் ஓரளவுக்கு தேறிய script-writer. இன்னொன்று நல்ல Businessman.
இதில் 'ஓரளவுக்கு' என்று சொல்வதற்க்குக் காரணம் இருக்கிறது. Gentleman'ல் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்த ஷங்கர், காதலன் மாதிரி ஒரு டுபுக்கு subject எடுத்து இருக்க வேண்டாம். மறுபடி இந்தியன் மாதிரி ஒரு படம் கொடுத்து விட்டு Jeans எடுத்து இருக்க வேண்டாம். மறுபடியும் முதல்வன் மாதிரி எடுத்து விட்டு அப்படியே script என்றால் என்ன என்பதை மறந்து இருக்க வேண்டாம். Boys படத்துக்கு துள்ளுவதோ இளமை எவ்வளவோ decent movie. அந்நியன் - வெறும் MPD வைத்து ஒட்டப்பட்ட கதை. அதிலேயே logic என்பதைத் தன் வீட்டில் வைத்துப் பூட்டி விட்டுத் தான் படம் எடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது சிவாஜி...


ஆனந்த விகடன் பாணியில் சொல்ல வேண்டுமானால் முதல் பாதி கலகல. இரண்டாம் பாதி படபட. Action-packed movie என்பது வெறும் சண்டை மட்டும் இருந்தால் போதாது. கொஞ்சம் brilliance'உம் வேண்டும். காக்க காக்க - best example. ரஜினி படத்திலையே recent time'ல், பாட்ஷாவை சொல்லலாம். வெறும் script மட்டும் படத்தைக் கொண்டு போக முடியும். அது நிச்சயம் சிவாஜியில் missing. Logic என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் படம் பார்ப்பேன் என்று நீங்கள் சொன்னால், முதல் பாதியே எவ்வளவோ better. ரஜினி படத்தில் அதை எல்லாம் எதிர் பார்க்கக் கூடாது என்ற புத்திசாலித்தனமான(?) முடிவை நீங்கள் எடுத்து இருந்தால், இரண்டாம் பாதி நன்றாக தான் உள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான் படத்தின் மையக் கரு. எனக்குத் தெரிந்து திரை அரங்கில் counter'ல் யாரும் டிக்கெட் வாங்குகிறார்களா என்று தெரியவில்லை. Even, sathyam theatre'லும் முதல் 2 வாரத்துக்கு tickets booked'ஆம். முதலில் எனக்கு தெரிந்த இடத்தில் Rs. 250 சொன்னார்கள்! நிச்சயம் இந்த பணம் Sathyam theatre'க்குப் போகப் போவதில்லை. பிறகு யாருக்கு செல்கிறது? Anyway, தவறு என்பது முதலில் நம்மிடம் இருந்து தானே ஆரம்பமாகிறது? Rent-reciept'க்கு duplicate bill கொடுத்து விட்டு இதைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? படம் 80 கோடி business என்கிறார்கள். 100 கோடி என்கிறார்கள். உண்மையான கணக்கைத் தான் ரஜினியோ, AVM'ஓ வெளியிடுவார்களா ? யாரும் திருந்தப் போவதில்லை. யாரையும் திருந்த விடப் போவதுமில்லை.

சரி படத்துக்கு வரலாம். அந்த கொஞ்சம் போல இருக்கும் அறிவையும் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து இருக்க வேண்டும். முதல் பாதியில் scenes lively'ஆக இல்லையென்றாலும் lovely'ஆக இருந்தது. இரண்டாம் பாதியில், atleast ரஜினியின் style'ஐ நன்கு exploit பண்ணி இருந்ததால் படம் பார்க்க முடிந்தது.
நமது Finance minister இன்னும் படம் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இந்த நேரத்துக்கு எல்லாம் paper'ல் news வந்து இருக்கும், auditors'ஐ சந்திக்க வேண்டும் என்று. கறுப்புப் பணம் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க இத்தனை எளிய வழி இருக்கும் போது எதனால் இவர்கள் raid நடத்துகிறார்கள் என்றே தெரியவில்லை ;-) இங்கிருந்து hawala மூலம் தன்னிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை ரஜினி வெள்ளை ஆக்குவது எல்லாம் okay. ஆனால், மறுபடியும் அதே கறுப்புப் பணம் இந்தியாவிற்க்கு உள்ளேயே தானே இருக்கிறது? அழகாக மறந்து மறைத்து விட்ட logic. பேசாமல் ராகுவரன்-ஐ AIMS dean ஆக்கிவிட்டால், இறந்து இரண்டு மணி நேரம் ஆன patients'ஐயும் CPR மூலம் பிழைக்க வைத்து விடலாம்! தயவு செஞ்சு படம் பார்க்கும் போது மூளையை overtime பார்க்க விடாதீர்கள். இல்லாவிட்டால், இந்த மாதிரி கிறுக்குத் தனமான idea'க்கள் எல்லாம் தோன்றும்.


ஆனால் அந்த மொட்டை ரஜினி intro, உண்மையிலேயே class தான் . அந்த climax fight'க்காகவே படம் பார்க்கலாம். படையப்பா வசனம் தான் நியாபகம் வருகிறது. "எத்தனை வயசானாலும் அந்த style மட்டும் அப்படியே இருக்கு!"

பாடல்களில் graphics இல்லை, அல்லது வெளியில் தெரியும் படி இல்லை. So ஷங்கர்-க்கு நன்றி. ஆனால் Shreya'ஐ படம் முழுவதும் அழகாகக் காட்டி விட்டு (தாவணி போட்ட தீபாவளி!), பாடல்களில் உரித்த கோழியாக ஆட விட்டத்தைத் தான் சகிக்க முடியவில்லை. "அழகான குடும்பப் பாங்கான தமிழ் பெண் வேண்டும் " - ரஜினி தான் தாயிடம் கேட்பது. ஆனால், தான் காணும் கனவுப் பாடலகளில், அவளை அரை நிஜாருடன் ஆட விடுகிறார். :-( Camera - ஒரு முக்கியமான matter இந்தப் படத்தில். ரஜினியை இளமையாகவும் காட்ட வேண்டும் . அவரின் சண்டைகளும் style'ஆக இருக்க வேண்டும். இதுக்கு K.V.ஆனந்த் மாதிரி cameraman வேண்டும். Antony போல் editor'உம் வேண்டும். எனக்குத் தெரிந்து recent time'இல் வந்த கொஞ்சம் low light'இல் எல்லாம் எடுக்க பட்ட ரஜினி படம் இதுவாக தான் இருக்க வேண்டும். Rahman முதல் முறையாக ரஜினிக்குக் கொஞ்சம் style'ஆக music போட்டு இருக்கிறார். இந்தப் படத்துக்கு சுஜாதா வசனம் ஏன் என்று தான் எனக்குக் கடைசி வரை புரியவே இல்லை.

hmm... இந்த படத்துக்கு இதுக்கு மேலேயும் time spent பண்ணி review எழுதித் தான் ஆக வேண்டுமா? ஏன் உங்களின் நேரத்தையும் வீண் அடிக்கிறீர்கள்? சிவாஜி பார்க்க வேண்டும் என்பது நாம் பிறக்கும் போதே நமது தலையில் எழுதப் பட்ட விதி. Animation movie எல்லாம் பார்ப்பது இல்லையா? அதில் என்ன logic'ஆ பார்க்கிறோம்? So, go and enjoy the movie. You will become cool. :-)

No comments:

Post a Comment