Thursday, June 12, 2008

Jun 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

மக்களே... கொஞ்சம் அவசரமா ஊருக்குக் கிளம்பிட்டு இருக்கிறதால வந்து blog'ஐயும் update பண்ணி, flickr'ல foto'வும் போடுறேன். அது வரைக்கும் இந்த picasaweb link'ல பாத்துக்கோங்க.

முதல் படம் போட்டிக்கு... இரண்டாவது படம் பார்வைக்கு...
http://picasaweb.google.com/luvathi/Bylakuppe/photo#5210843971170595154

http://picasaweb.google.com/luvathi/Bylakuppe/photo#5210844368899959682

Thursday, May 15, 2008

May 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

இந்த முறை Foto எடுக்கப் போனதே கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் தான். முதலில் இந்த மாத தலைப்பை மனதில் வைத்தே foto எடுக்கவில்லை... ஹி ஹி... 10 நாள் முன்பு தான் புது DSLR(Canon 40D) கைக்கு வந்ததால் அதை கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணவே நேரம் சரியாக இருந்தது. (இன்னும் அந்த ஆராய்ச்சி முடியலைங்கிறது வேற விஷயம்) தற்செயலாக எடுத்த ஒரு foto இந்த மாத தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது. :-)

போன வாரம் ஒரு அருமையான புது விஷயங்கள் நிறைய கற்றுக்கொண்ட ஒரு வித்தியாசமான trip. காஞ்சிபுரம் & வேலூர். நாதனும் பிரபாகரும் கடைசி நேரத்தில் வர முடியாமல் போனது ஒரு வகையில் இழப்பு தான் என்றாலும், Peevee'ம் Ravages'ம் அந்த இழப்பை ஈடுகட்டி விட்டார்கள். Street fotografy'ஐ ஒரு புது விதமான கோணத்தில் அணுக Peevee'யுடனான சந்திப்பு மிகவும் உதவியது. இதுவரை, நான் foto எடுத்த மக்களுடன் பேசிய அனுபவமே கிடையாது. ஆனால், street fotografy'க்கு interaction மிக முக்கியமான ஒன்று என்பதே இந்த trip'ல் தான் புரிந்தது. (அப்பாடா.. Jury'குக் கொஞ்சம் ice வச்சாச்சு) :-)
Ravages'ம் fotografy பற்றி நிறைய tips எல்லாம் கொடுத்தார்.

Selva'வும் நாதனும் எனது ஊருக்கு வந்தது, fotografy, advertisement மேல் எனக்கு இருந்த ஆர்வத்தை வெளிக்கொண்டு வந்தது என்றால், இந்த காஞ்சி trip அதையே இன்னும் கொஞ்சம் friendly'ஆன manner'ல் அணுக ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. Thanx to everyone who are guiding us. :-)

இனி, இந்த மாத போட்டிக்கு... (முதல் படம் போட்டிக்கு)

0192-IMG_0941(@Jalagandeshwarar Temple, Vellore)



இது சும்மா எடுத்தது.
0193-IMG_0951(@Jalagandeshwarar Temple, Vellore)

Tuesday, April 15, 2008

April 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/04/pit-2008.html

வர வர நம்ம PIT'ல conceptual'ஆன தலைப்புகள் வர ஆரம்பித்து விட்டது. வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். :-)

தனிமை... இந்த topic'ல நாம தான் நிறைய fotos எடுத்திருப்போமேன்னு யோசிச்சிட்டு சரி... இந்த தடவை வேற ஏதாவது வித்தியாசமா try பண்ணலாம்னு யோசிச்சி(?) எடுத்தது தான் கீழ இருக்குற ரெண்டு படங்களும்.

முதல் படம் போட்டிக்கு... உஷ்.... அப்பப்பா... இந்த foto'வுக்கு மக்களை pose குடுக்க வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடிச்சி. உங்க face'லாம் எடுக்க மாட்டேங்க... திரும்பி உக்காந்தா போதும்னு ஒவ்வொரு lovers கிட்டயா கேட்டு செருப்படி வாங்காத குறையா திரும்பிப் போகலாம்னு யோசிச்சிட்டு(அட... யோசிக்கிரதை விட மாட்டானாப்பா இவன்?) இருந்தப்போ தான் பளிச்சின்னு ஒரு idea... lovers தான ஒத்துக்க மாட்டாங்க... நாம ஏன் married couple கிட்ட கேக்க கூடாதுன்னு ஞானோதயம் வந்திச்சு. கும்பிட போன தெய்வம் மாதிரி இந்த couple வந்தாங்க... அப்புறம் அந்த uncle-aunty(தாத்தா பாட்டின்னு கூப்பிடக் கூடாதாம்) :-) எல்லாரும் ரொம்ப பொறுமையா உக்காந்து pose குடுத்தாங்க. அவர்களுக்கு எனது நன்றிகள்.

இரண்டாவது படம்... அந்த glass and its reflection'ஐ மட்டும் concentrate பண்ணி ஒரு தண்ணி அடிக்கிற மனுஷனோட தனிமையை எடுக்கனும்னு நினைச்சேன்... அந்த அளவுக்கு வரலை.

முதல் படத்தை click பண்ணி கொஞ்சம் பெருசா பாருங்களேன்.

0162-Loneliness


0161-DSC05594

Saturday, March 15, 2008

Mar 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/03/pit-2008.html

கடைசி bus இன்னும் போகலைல்ல? இதோ ஓடியாந்துட்டேன்...

இந்த முறை எனக்கு மிகவும் பிடித்த title. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் உருண்டு புறண்டு எல்லாம் photo எடுத்ததைப் பார்த்து ஊரே தப்பு கொட்டிச் சிரிச்சது. ஆனா, பேருலயே ஆதி இருக்கிறதாலயோ என்னவோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி கடைசி வரைக்கும் விடாம fotos எடுத்துட்டு வந்துட்டேன்... :-)

இரண்டும், மூன்றும் போட்டிக்கு...

இந்த foto Reflections'ங்கிற தலைப்புக்கு literal'ஆ பொருந்தலைன்னாலும் conceptual'ஆ பொருந்துதுங்கிறதால இதையும் பார்வைக்கு வச்சிருக்கேன்.













வழக்கம் போல கொஞ்சம் அதிகப்ரசங்கித்தனமா ஒரு Ad'ம் பண்ணிட்டேன். இது மட்டும் சென்னையில் எடுத்தது. Flash போட முடியாதுங்கிரதால ISO'ஐ கொஞ்சம் அதிகப்படுத்தினதால noice கொஞ்சம் அதிகம் இருக்கு. :-(


















மத்தது எல்லாம் மீனாட்சி அம்மன் கோயில்ல எடுத்தது.


















கீழ இருக்குற மற்ற இரண்டும் பார்வைக்கு...


Thursday, February 28, 2008

சுஜாதாவிற்கு அஞ்சலி...

நாம் ஒரு தமிழ் சிறுகதை எழுத்தாளரை இழந்து விட்டோம்... ஒரு நாவலாசிரியரை இழந்து விட்டோம்... ஒரு நல்ல விமர்சகரை இழந்து விட்டோம்... ஒரு atricle writer'ஐ இழந்து விட்டோம்... ஒரு cinema வசனகர்த்தாவை இழந்து விட்டோம்... ஒரு cinema script writer'ஐ இழந்து விட்டோம்... அறிவியலை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற ஒரு மாமேதையை இழந்து விட்டோம்...


இந்த list எப்பொழுது முடியும்? இவர் கால் பதிக்காத துறை தான் எது? சரியாக சொல்லப்போனால் ஒரு genius'ஐ இழந்து விட்டோம். உண்மையில் சுஜாதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான்!!

Friday, February 15, 2008

February 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2008/01/2008-pit_31.html

இதோ நானும் வந்துட்டேன். Memory Stick corrupt ஆகிட்டதால அதுக்கு replacement'ஏ 3 நாள் முன்னாடி தான் வந்தது... அதுனால தான் late ஆகிப்போச்சுன்னு சொன்னா யாரும் நம்பவா போறீங்க.. :-) வழக்கம் போல, சோம்பேறித்தனத்தால late ஆகிப்போச்சு. ஹி ஹி...

இந்த முறையும் topic நல்ல generalized ஆக இருந்ததால கொஞ்சம் conceptual'ஆகவும் try பண்ணிருக்கேன். முதல் foto'வைத் தவிர மத்த ரெண்டு foto'வையும் comments'ஓட பாருங்க. Photo'வை click பண்ணிப் பாருங்க... என்னோட blog backround color நல்லா இருக்காது.

முதல் இரண்டும் போட்டிக்கு...





இதை bike Ad'ஆ consider பண்ணிக்கலாமா? :-)
















"This may turn into Red also. Be Aware." -- Anti AIDS campaign

















Like One another Valentine's Day for me ;-)

Tuesday, January 15, 2008

ஜனவரி 2008 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2007/12/2008-pit.html

இந்த முறை தலைப்பு நிறைய creative ideas'க்கு வழிவகுப்பது போல் இருந்தது. தலைப்பைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி.


சரி... இந்த முறை தலைப்பை வைத்து, நம்ம PIT'க்கு ஒரு AD மாதிரி பண்ணலாமேன்னு முடிவு பண்ணி எடுத்தது தான் முதல் படம் தவிர மற்ற படங்கள். :-)


Even, இந்த முதல் படத்தைக் கூட வளையலுக்கு AD'ஆக consider பண்ணிக் கொள்ளலாம். :-)

















அடுத்தது என்னால் முடிந்த அளவுக்கு simple'ஆக எடுக்க முயற்சி பண்ணியிருக்கிறேன்.

Tagline can be like this: Now... its in tamil... Visit http://photography-in-tamil.blogspot.com/















அடுத்தது... சொல்லப்போனால், எதாவது school தமிழ் book'ஐ வாங்கி அதை வைத்து எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்றும் எண்ணம் உள்ளது. சரி... concept வந்திடுச்சின்னு விட்டுட்டேன். ஹி.. ஹி...

















அடுத்தது... indoor'ல் எடுத்தது..

















முதல் இரண்டு படங்களும் போட்டிக்கு.

Friday, January 04, 2008

Who is to be blamed...?

Actually, I wanted to write this when Leena Manimegalai's shawl issue. Now only posting my views... My take is, women dont really know what is women's freedom is... Wearing whatever they want certainly cannot be classified as "women's freedom". Yes... they have every rights to wear anything... But, just think abt the thoughts roll-in the minds of men, when women wear such tight T.shirts and such things... My comments below speaks abt that...

News:

http://www.ibnlive.com/news/it-happens-everywhere-mumbai--top-cop-on-molestation/55447-3.html

and Response:

http://differentstrokes.blogspot.com/2008/01/open-letter-to-mumbai-top-cop-jadhav.html


And, my reply to the blogpost...

I too strongly condemn the irresponsible speech of the Commissioner of Mumbai. And, the scum(as per ur words) should be punished. There is no doubt in it.

But, I wanna say one another thing, which most of the ladies/girls dont care.

Here in India, especially in Mumbai, Delhi areas, in the name of western culture, women started to wear westernised clothes. (BTW, I am not a male-chauvinist. I do respect women's feelings. But, dont give any justifications(or in the name of "women's freedom) for wearing such dresses.)


First understand onething... Unlike women, men's 'feelings' (Hope u get what feeling I meant) towards women increase suddenly after seeing them. Its human nature. So, once a man sees a gal with very little dress, his feelings will be aroused which will lead to certain type of molestation. By saying this, noway I justfy the crime done by those scum. But, what I wanted to say is women also should realize that they are also partly the reason for this type of crimes.

Tuesday, December 18, 2007

கல்லூரி -- விமர்சனம்

எழுத ஆரம்பிக்கும் போதே சொல்லிவிடுகிறேன்... இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடித்தது என்றும் சொல்ல முடியவில்லை... அதற்காக ஒரு சுமாரான படம் என்றும் ஒதுக்கி விட முடியவில்லை... படத்தில் ஏதோ வித்தியாசமாக இருந்தது. ஆனால், அந்த வித்தியாசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அது தான் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு வரி!! :-)

என்னோட friend Suku சொல்லிக்கொண்டே இருப்பான்... மலையாளப் படங்கள் அளவுக்கு தமிழ்ப்படங்களில் nativity'யையே பார்க்க முடிவதில்லை என்று. அவனைத் திருப்திப் படுத்தும் அளவுக்கு பார்த்தவுடன் ஒரு கிராமத்தை, ஒரு உண்மையான கல்லூரியை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் director Balaji. அந்த வகையில் முதல் பந்திலேயே sixer அடித்துவிடுகிறார். அதற்குப் பின் வரும் எல்லா scenes'ம் 2s & 4s'ஆக அடித்துக் கொண்டு போக முயற்சி பண்ணியிருக்கிறார். அதுவும், ஒவ்வொரு பந்திற்கும் ஒவ்வொரு style'ஆக ஆடும் Sachin'ஐப் போல்!!

முரளி... அவருக்குப் பின் கொஞ்ச நாள்களுக்கு விஜய்... இவர்கள் எல்லாம் college books'ஐத் தூக்கிக் கொண்டு அலைந்த comedy'ஐப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு, இந்த "கல்லூரி" நிச்சயம் ஒரு புது அனுபவம் தான்! கிட்டத்தட்ட, நாம் உண்மையிலேயே college'ல் அடித்த லூட்டிகள், சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், வழிசல்கள், (போடாத?) கடலைகள், etc... (மதியம் round கட்டி உட்கார்ந்து சாப்பிடும் போது, கோக்கன், quarter என்று ஒவ்வொரு வாத்தியார்களாக சபையில் இழுத்துப் போட்டு, டார் டாராகக் கிழிப்போமே... அது மட்டும் தான் இல்லை!!) :-)

Beautiful characterization in the movie. எல்லா charaters'ம் scene'உடன் அவ்வளவு அழகாகப் பொருந்துகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேல் தமன்னா ரொம்ப அழகாக இருக்கிறாள்...(hee hee) நன்றாக நடிக்கவும் செய்கிறாள். script ரொம்ப அற்புதமாக இருந்தது... ரொம்ப அழகான, simple'ஆன introduction of characters. அந்த இரட்டையர்களைப் பற்றி குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.

முத்துவுக்கு தமன்னா மீதான ஈர்ப்பும், அதை மாற்ற அவன் படும் கஷ்டங்களும், பின் அவளைக் காதலிக்க ஆரம்பிப்பதும், மெல்ல மெல்ல தமன்னாவிற்க்கும் அவன் மேல் ஈர்ப்பு வருவதும் உண்மையிலேயே கவிதை தான்!! இது ரொம்ப இயல்பா வந்திருக்கு script'ல. அதாவது கொஞ்சம் உவமையோட சொல்லனும்னா, மொட்டிலிருந்து ஒரு பூ மலருவதை பக்கத்திலேயே இருந்து படம் எடுத்தது மாதிரி!! :-)

இது போக, படிக்கும் ஒவ்வொரு students'ன் குடும்பப் பின்னணியையும் script'ன் flow பாதிக்காமல் சொன்ன விதம் அழகு. சின்னச் சின்ன characters'ம் மனதில் தங்குகிறார்கள். கல் quarry மற்றும் அரசியல்வாதிகளின் பாதிப்பைப் பதிவு செய்ததற்கும் பாராட்டுக்கள்.

படத்தின் art direction'ம், camera'ம் படத்தை வேறொரு தளத்திற்குக் கூட்டிப்போகின்றன. Main lead character, முத்துவின் வீட்டில் sportstar poster'ம்(ஏழை), தமன்னாவின் வீட்டில் அதுவே sportstar book'மாக(வசதி) வித்தியாசம் காட்டியதில் இருந்து, முத்துவின் அம்மா, ஒரு பழைய B&W photo'விலும், தமன்னாவின் அம்மா album'லும் என்பது வரை எவ்வளவு care எடுத்து செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். Cinematography(செழியன்)... wow... அதுவும், அந்த மழை song!! Class!! Joshua Sridhar பாலாஜி சக்திவேலுக்கு மட்டும் நல்ல tunes போடுகிறார். :-) Editing மட்டும் தான் கொஞ்சம் தயை பார்க்காமல், ஒரு 30 min cut பண்ணியிருக்கலாம்!

என்ன செய்வது... படத்தின் இத்தனை +'ஐயும் அந்த ஒரு climax - ஆக்கிவிடுகிறது. எந்த impact'ஐயும் ஏற்படுத்தவில்லை. எனக்குத் தெரிந்து நிறைய பேர் அந்த climax'ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... ஏன்னு கேக்குறீங்களா?? ஒரு scene வரப் போகுதுன்னா, அந்த scene'க்குக் கொஞ்ச நேரம் முன்னாடியே நம்மளை அதுக்கு தயார் பண்ணிடனும்... அதுனால தான் மணிரத்னம் மாதிரி directors படங்கள்ல, பாடல்கள் வர்றதே நமக்குத் தெரியாது... நம்மைத் தயார் படுத்திட்டு, பாட்டு வரப்போகுதுன்னு நாம் feel பண்ணி இந்த இடத்தில் வரும்னு நாம யோசிச்சு வச்சிருக்கிற இடத்தில் வைக்காம கொஞ்சம் தள்ளி வைப்பாங்க. அது மாதிரி தான் climax தான்... அந்த கடைசி 10 நிமிடத்திற்காக நம்மை தயார் செய்வது தான், அதற்கு முன் உள்ள 2 மணி நேரங்களும்... அதிலும் climax'ற்கு அருகில் உள்ள அந்த 20 to 30 min ரொம்ப முக்கியம்... அந்த இடத்தில், படம் எந்த மாதிரி முடிவை ஒரு பார்வையாளன் எதிர்பார்த்து உட்கார்ந்து இருப்பானோ, அதிலிருந்து சிறிது மாறுபட்டு எடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நம் பார்வையாளன் இருப்பான். அதை விட்டுவிட்டு, அப்படியே நேர்மாறாக எடுத்தால், அதற்கு முன் எடுத்த 2 மணிநேரங்களும் மறந்து போகத் தான் வாய்ப்பிருக்கு! அந்த தவறு தான் இந்தப் படத்தில். அதற்கு முன் சில scenes'களில் climax'ஐப் பற்றி ஒன்றிரண்டு hints கொடுத்திருப்பது படம் முடிந்த பின் தான் உணர முடிகிறது. Too late!!

ஆனால் ஒரு சாதாரண பார்வையாளனாக இந்த review'ஐ எழுதாமல், ஒரு நல்ல movies'ஐ வரவேற்பவன் என்ற பார்வையில் இருந்து பார்த்தால், அதற்கு முன் வரும் 2 மணிநேரங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தான் வேண்டும்... அப்படிப் பார்த்தால், இந்தப் படம் உண்மையில் தமிழ் cinema முன்னால் எடுத்து வைத்த இன்னொரு அடி தான்.

Friday, December 14, 2007

டிசம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு...

நம்ம நடுவர்கள் 'வித்தியாசமா' photo எடுக்க சொல்லிட்டாங்கலேன்னு, கொஞ்சம் யோசிச்சு(?), கொஞ்சம் பைசா செலவு பண்ணி, T.Nagar பூக்கடை bazaar'ல இருந்து கொஞ்சம் roses வாங்கிட்டு போய், கூட வேலை செய்யுற colleagues கைல கால்ல விழுந்து, அவங்க தலைல வச்சிக்க சொல்லி, photo எடுத்துப் பார்த்தாத் தான் தெரிஞ்சது... face or parts of face'ஓட எடுத்தாத் தான் foto அழகா வரும்னு! ஆனா அப்போ subject, flower'ஆ இல்லாம face'ஆப் போய்டுமே... So, அதுக்கப்புறமும் கொஞ்சம் யோசிச்சு(அடங்க மாட்டங்குறான் பாத்தீங்களா!!), Ad'லல்லாம், flowers வச்சு, அதை out-of-focus செஞ்சு படம் எடுத்திருப்பாங்களே... அதையே கொஞ்சம் மாத்தி, flower'ஐ focus பண்ணி foto எடுக்கலாம்னு எடுத்தது தான், இந்த முதல் foto. மீதி ரெண்டும் ஊட்டியில்(மன்னிச்சுக்கோங்க நடுவர்களே... உண்மைலயே, போன மாசம் தான் ஊட்டி போய்ட்டு வந்தேன்) எடுத்தது.

முதல் இரண்டு படங்களும் போட்டிக்கு... (Fotos'ஐ click'க்கி, பெரியதாக்கிப் பார்க்கவும். எனது blog backround color'க்கு fotos நல்லா தெரியாது)

http://www.flickr.com/photos/ursathi/2108689407/
Originally uploaded by ursathi



>

ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கக் கூடாது?

ஆரம்பிக்கும் முன்பே சொல்லி விடுகிறேன்... நான் BJP ஆதரவாளனோ, hindutva'வின் மேல் பிடிப்புள்ளவனோ கிடையாது. சொல்லப் போனால், சில நாள் முன்பு எனக்கு வந்த ஒரு forwarded mail'க்கு reply அடிக்கும் போது கூட, நான் மோடியின் கோத்ரா riot'ஐ வன்மையா எதிர்க்கிறேன் என்றும் கூட சொல்லியிருந்தேன். So, இதை மனதில் வைத்து இந்த கட்டுரையைப் படிக்கவும்.

சரி... இப்பொழுது மோடி செய்வது என்ன என்று பார்க்கலாம். Hindutva'வை வைத்து, அதாவது மதத்தை வைத்து, அரசியல் பண்ணுகிறார் என்பது தானே media உட்பட எல்லா அரசியல்வாதிகளும் மோடி மேல் சொல்லும் குற்றச்சாட்டு?

அப்படிப் பார்த்தால், மற்ற அரசியல்வாதிகள் ஜாதிகளை வைத்து அரசியல் செய்வது போல் தானே இதுவும்? வன்னியர்களுக்காக மட்டுமே ஒரு கல்லூரியை நடத்துவதை பெருமையாகப் பேசுகிறார் ராமதாஸ். பகத்சிங்கின் ஜாதிக்காரர்கள் யாரும் தமிழ்நாட்டில் வாழாததால், பசும்பொன் தேவர்க்கு மட்டும் விழா எடுக்கிறார்கள் கலைஞரும் அம்மாவும். இது தமிழ்நாட்டில் மட்டும் நின்று விடவில்லை. தலித்களுக்கு ஆதரவாளராக காட்டிக்கொள்ள மாயாவதி உ.பி-யில் கஷ்டப்படுகிறார்(?) பீகாரில் குறிப்பிட்ட ஜாதிக்காரர்களின் ஆதரவாலேயே மறுபடி மறுபடி வெற்றி கண்டார் லல்லு. இப்படி புற்றீசல் போல், இந்தியா முழுவதும் ஜாதியை வைத்துத் தான் அரசியல் பண்ணுகிறார்கள்.

எல்லோரும் ஜாதியை வைத்து மக்களைப் பிரிக்கிறார்கள் என்றால் மோடி மதத்தை வைத்துப் பிரிக்கிறார். அவ்வளவு தானே வித்தியாசம்?? huh ...??

மறுபடியும் சொல்கிறேன்... நான் மோடி செய்ததை நியாயப் படுத்தவில்லை. ஆனால், எல்லா அரசியல்வாதிகளும் அவர் செய்வதைத் தான் கொஞ்சம் வேறு மாதிரி செய்கிறார்கள். பின் ஏன் மோடிக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு? என்ன மற்றவர்கள் மாட்டிக்கொள்ளாத வகையில் செய்வதை மோடி மாட்டிக்கொள்ளும் வகையில் செய்து விட்டார்.

இதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், மோடி உண்மையிலேயே சிறந்த நிர்வாகி... தனது அரசாங்கத்தில் ஊழல் பேர்வழிகளுக்கு இடம் கொடுக்கவில்லை, அதனாலேயே கட்சிக்குள் எதிர்ப்பு நிறைய கிளம்பியும் கூட. "Gramin"ங்கிற திட்டத்தால, எல்லா கிராமங்களுக்கும் power supply கிடைத்திருக்கிறது. தொழில்துறை முன்னேற்றத்தில் இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக இருக்கிறது குஜராத். அடுத்தது ரொம்பவும் முக்கியமான point. தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறார். Afsal Guru பற்றி தைரியமாக கேள்வி கேட்கிறார். 4 மாநிலங்களில் தேடப்பட்ட குற்றவாளி, Shorabudhin Sheik'ஐப் போட்டுத் தள்ளியது பற்றி தைரியமாகப் பேசுகிறார். கடந்த முறை ஊழல் புரிந்தவர்களுக்கு இந்த முறை தேர்தலில் seat கொடுக்கவில்லை. etc...

அரசியல் என்னும் சாக்கடையில் மோடி உட்பட எல்லா மட்டைகளும் ஒரே குட்டையில் ஊறி இருக்கும் போது, இலவச TV போன்ற கவர்ச்சிகளை நம்பாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மோடி மாதிரி ஒரு CM'ஐ ஏன் ஆதரிக்கக் கூடாது என்பது தான் என் கேள்வி. கோத்ரா வன்முறை உண்மையிலேயே கண்டிக்கத் தகுந்தது தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், திரும்பத் திரும்ப அதைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. அப்படிப் பார்த்தால், Congress'ஐப் பற்றி பேசும்போது இன்னும் சீக்கிய வன்முறைகளைத் தான் பேச வேண்டும். தி.மு.க பற்றிப் பேசினால், சர்க்காரியா ஊழலைத் தான் பேச வேண்டும். லல்லு கூடத்தான் பீகாரை சீரழித்தார். ஆனால் அதற்காக, அதன் பின், railway துறையை profit'ல் போக வைத்ததைப் பெருமையாகப் பேசவில்லையா? அதுபோல் ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் மோடிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க கூடாது?

இவ்வளவு நாளும், "why we should not support Modi."னு fullstop'ஓடு பேசிக்கொண்டிருந்த நான் இப்பொழுது, "why shouldnt we support Modi?"னு question mark'ஓடு நிறுத்துகிறேன். எடுத்த எடுப்புலையே, 'நீ துக்ளக் படிக்கிறவன். இப்படித் தான் பேசுவ'ன்னு சொல்லாம, கொஞ்சம் தர்க்கரீதியா யோசிச்சுட்டு, அப்புறம் reply பண்ணுங்க.... okay'ஆ? இதை ஒரு open debate'ஆக வைக்கிறேன். உங்கள் comments'ஐ மறக்காமல் பதிவு பண்ணிட்டு போங்க... நீங்க reply'ல குறிப்பிடுற கருத்துக்கள் logical'ஆ இருந்தா, என்னோட இந்த question mark'ஐ மறுபடி fullstop'ஆக மாற்றிக்கொள்ள நான் எப்பவும் தயார்.

Tuesday, December 11, 2007

எவனோ ஒருவன் -- விமர்சனம் அல்ல

இந்தப் படத்திற்கு நான் விமர்சனம் எழுதவில்லை. இந்தப் படம் பார்த்து விட்டு வெளியில் வந்தவுடன் எனக்கு எழுந்த முதல் கேள்வி இந்தப் படத்திற்கு ஏன் 34 awards என்று தான்.

Camera ரொம்ப அழகாக இருந்தது... அதுவும் நிறைய scenes side lighting தான். (முகத்தின் ஒரு பகுதி மட்டும் தான் lighting இருக்கும்.) ஒரு best shot என்று கூட சொல்லலாம்... மாதவன் அந்த படம் வரையும் பையனுடன் இரவில் பேசும் scene'ன் அந்த camera angle'ஐ... Just Class!! :-) (அந்த இடத்தில் வசனங்களும் ரொம்ப அருமை)

மற்றபடி இந்தப் படத்தின் script ரொம்பவும் வித்தியாசமான ஒரு script'ஆக எல்லாம் எனக்குத் தோனவில்லை. நாம் GentleMan'லிருந்து அந்நியன் வரை பார்த்துப் பழகிவிட்ட ஒரு script தான். என்ன ரொம்பவும் யதார்த்தமான script. அந்த மாதிரி ஒரு situation யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் அந்த மாதிரி react பண்ணலாம். அது ஒன்று தான் படத்தின் பலம்.

சில விஷயங்களை, நாம் கண்டும் காணாமல் விட்டு விடும் விஷயங்களைப் பற்றி, படம் எடுத்ததற்காக இயக்குனர்க்குப் பாராட்டுகள். இது தான் இந்தப் படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டிய விஷயம். இன்றைய தினமணியில் ஒரு தலையங்கம்... "பெரிய level'ல் நடக்கும் ஊழல்கள் எல்லா நாடுகளிலும் உள்ளன. ஆனால், சிறு சிறு level'ல் traffic police'லிருந்து RTO office வரை நடக்கும் ஊழல்களால் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப் படுவதால் தான் அவை பெரிதாகத் தெரிகின்றன." அப்பட்டமான உண்மை. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிப் பார்த்தால், நாமும் எவ்வளவோ இடத்தில் நமக்கு ஏற்ற மாதிரி law'ஐ adjust செய்து கொள்ளப் பழகிவிட்டோம் என்று கூட சொல்லலாம். அது தான் 'No parking' sign இருந்தும் park பண்ணுவது, etc. Traffic signal'ல் red இருந்தால் கூட தாண்டிப் போவது போல்... இல்லாவிட்டால் பின்னால் வரும் தண்ணி lorry'ல் அடிபட்டு சாக வேண்டும். நம்மை விட பலசாளியிடம் இருந்து தப்ப நாமும் தப்பு பண்ண வேண்டியிருக்கிறது.

இதற்கெல்லாம் எதிராக ஒருவன் கிளர்ந்தெழுந்தால் (real life'லும்) என்னவாகும் என்பது தான் இந்தப் படம். As a movie'ஆக இதை என்னால் ஒரு சிறந்த படமாக ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு நல்ல கருத்தை சொல்லிய படம் என்ற பார்வையில் உண்மையில் இதுவும் ஒரு நல்ல படமே...

ஆனால் படம் பார்த்த எத்தனை பேருக்கு இது தவறு என்று புரியப்போகிறது என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் தவறு செய்பவர்கள் நாம் தானே! நம்மை பற்றிய தவறுகளை நாம் எப்போது ஒப்புக்கொண்டோம்? உண்மையில் theatre'க்கு வந்தவர்களும் சில scenes'ல் maddy loose தனமாக நடப்பதாகத் தான் கத்தினார்கள். ஏன்... இவ்வளவு பேசும் நானும் கூட அப்படித்தான் யோசித்தேன். என்ன ஒரே ஒரு வித்தியாசம்.. கத்தவில்லை. யோசிக்க மட்டும் செய்தேன்... யோசித்தேன் என்றால், maddy செய்வது சரி என்று தான் எனக்கும் படுகிறது... ஆனாலும், அதை ஏன் loose தனம் என்று எனது practical mind சொல்கிறது என்றும் யோசித்தேன்.

உண்மையில் இப்படி ஒரு life வாழ்வதற்காக நாம் எவ்வளவு compromise செய்ய வேண்டியிருக்கிறது? இதற்கான மாற்றம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்வி தான் எல்லார் மனதிலும் வழக்கமாக எழுவது... Atleast, நாம் நம் அளவில் சரியாக இருக்கலாமே... நம்மால் முடிந்த அளவிற்கு... தண்ணி lorry'ல் அடி படாத அளவிற்கு! மாற்றம் தானாக நடக்கும் என்று தான் தோன்றுகிறது.

Saturday, December 08, 2007

பொல்லாதவன் -- விமர்சனம்

சில படங்களை அதிக expectations'னோடு பார்க்கப் போவோம். சுத்தமாக ஊற்றிக் கொள்ளும். சிலவற்றை friends யாராவது நல்லா இருக்குன்னு சொன்னதால பார்க்கப் போவோம்.எதிர்பாராத ஆர்ச்சரியங்கள் காத்திருக்கும். முதலாவதற்கு eg ராமேஸ்வரம். இரண்டாவதற்கு இந்தப் படம்.Correct'ஆக சொல்லப்போனால் இந்தப் படத்திற்குப் போகலாம் என்று கடைசி நிமிடத்தில் தான் முடிவெடுத்தேன். So, title card வேறு miss ஆகி விட்டது. படம் முடிந்து வெளிவரும் பொழுது, கொஞ்சம் சீக்கிரம் படத்திற்கு வந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்தது என்னவோ உண்மை. :-)

இந்தப் படத்தை எல்லாரும் Bicycle thieves உடன் compare பண்ணினார்கள். ஆனால் City of God உடன் compare பண்ண வேண்டிய படம் இது. (புதுப்பேட்டை படத்திற்கும் City of God'ற்கும் சம்பந்தமே கிடையாது. புதுப்பேட்டை முற்றிலும் புதிய கோணத்தில் எடுக்கப் பட்ட படம். Gangsters பற்றிய படம் என்றாலே City of God என்றால், City of God'ஐயும் God Father உடன் தான் compare பண்ண வேண்டும்)

பொல்லாதவனின் கதை City of God மற்றும் Bicycle Theives இரண்டையும் சேர்த்து எடுக்கப் பட்டது. கொஞ்சம் Munich touch கூட இருந்தது. படத்தின் base story Bicycle theives. இடையில் வரும் சம்பவங்களுக்கு inspiration City of God. கடைசியில் அவர்கள் குடும்பத்திற்கு வந்த பயத்தைக் காட்டும் பொழுது inspiration Munich.ஒரு gangster movie'ஐ கொஞ்சம் lively'ஆக எடுத்த விதத்திற்காக director வெற்றிமாறனுக்கு பாராட்டுகள். அதுவும் தனுஷ் bike'ஐத் தொலைத்து விட்டு, அதை கண்டெடுக்கப் போகும் இடங்களெல்லாம் ஒரு உண்மையான gansters இடத்திற்குத் தான் வந்து விட்டோமோ என்ற எண்ணத்தை வரவழைத்து விடுகிறது. மதுரையில் படிக்கும் போது எனது wallet'ஐத் தொலைத்து விட்டு ஒரு அசட்டு தைரியத்தில் நண்பன் Suku'வையும் கூட்டிக்கொண்டு திடீர் நகருக்குள் நுழைந்தது தான் ஞாபகம் வந்தது. :-)

Director வெற்றி மாறன், BaluMahendra'வின் assistant'ஆம். Camera'ஐப் பார்த்தாலே தெரிந்தது. ரொம்ப different angles, ரொம்ப different'ஆன movements. படத்தின் starting'ல் தனுஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் scene'ல் camera'வும் ஆடிக்கொண்டே இருக்கும். இது போக சில இடங்களில் கண்ணுக்கு உறுத்தாத camera shakes. ie: light'ஆக scene இடம்வலமாக ஆடிக்கொண்டிருக்கும் அல்லது handheld camera'வாக இருக்கும். தனுஷ் தப்பித்து ஓடும் அந்த குறுக்கு சந்தில் எவ்வளவு தூரம் continuous shot என்று கவனித்தாலே cinematography'க்கு டைரக்டர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். ரொம்ப natural lighting வேறு. ஒரு Counsiler'இன் கொலையை இவ்வளவு beautiful'ஆகவும் எடுக்க முடியுமா!! camera'வைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் தான் தெரிகிறது. நிறைய scenes, ie: 1 or 2 seconds'ல் வந்து போய் விடக்கூடிய scenes'க்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று. காக்க காக்க இளா அண்ணனைக் கொல்லும் அந்த scene... அப்பா... உண்மையில் இப்படி எல்லாம் camera'வை handle செய்ய முடியுமா என்ன!! பிறகு அந்த கடைசி fight... வெறும் Frames per second'ஐ வைத்துக் கொண்டு graphics effect கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த red tone படத்தின் உண்மையான நிறத்தைச் சொல்கிறது. இப்பொழுது தமிழ் film industry technical aspect'ல் ரொம்ப முன்னேறி விட்டது. எனவே மணிரத்னம், செல்வராகவன் மாதிரி directors படம் எடுத்தால் தான் cinematography'ல் வித்தியாசம் காண்பிக்க முடிகிறது. அந்த வித்தியாசத்தை வெற்றி மாறனும் காட்டி இருக்கிறார்.

Music G.V. Prakash... பாடல்கள் எனக்குப் பிடிக்கவில்லை. Already MSV கலக்கி எடுத்த பாடலை அவரை விடவும் நன்றாகபோடுவதென்பது முடியாத காரியம் தான். ஆனால் re-recording நன்றாக இருந்தது. முக்கியமாக அந்த ganster leader பேசும் போதெல்லாம் அடக்கி வாசித்தது...!

Dialogues & Audiography ரொம்பவும் அருமை. நாம் normal'ஆக கேட்காத dialogues. "அந்த கண்ணால என்னைப் பார்க்காதடா"னு சொல்லிக்கொண்டே கண்ணைக் குத்துவது... தனுஷின் சிறு சிறு love dialogues. ரொம்ப யதார்த்தமாக இருந்தது.

Editor யாரு.. Sreegar Prasad'ஆ? படத்தின் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விஷயம். முடிந்த வரை காதலைத் தவிர்த்து Gansters'ஐப் பற்றி கதையை நகர்த்திச் சென்ற விதம் அற்புதம். என்ன, யோசிக்காமல் பாடல்களையும் கத்திரி போட்டிருக்கலாம். ரொம்பவும் odd'ஆகத் தெரிகிறது. Moreover, படத்திற்குத் தேவையும் இல்லை.

இந்தப் படத்தில் மிகவும் கவர்ந்த விஷயம்... அதன் fast paced script தான். அங்கங்கே பாடல்கள் வந்து இம்சை கொடுத்தாலும், அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், ஒரு அற்புதமான script. அதுவும் இன்னொரு beauty... love scens தவிர்த்து விட்டுப் பார்த்தால் தனியாக ஒரு script. அதை சேர்த்துப் பார்த்தால் கூட கெடாத script. (inspiration தான் என்றாலும்) படத்தின் main characters இருவரும் மாறி மாறி கதை சொல்வது முற்றிலும் புதிய கோணம்.

படத்திற்கு முதலில் "TN 01 1386" என்று தலைப்பு வைத்திருந்தார்களாம். நமது தமிழக அரசின் லூசுத்தனமான சட்டத்தினால், பொல்லாதவனாகி, just ஒரு தனுஷ் படம் போல் மாயை உருவாகிவிட்டது. இந்த மாதிரி நல்ல படங்களுக்காகவாவது rule'ஐத் தளர்த்தலாம்.

Thursday, November 29, 2007

LTTE'இன் அராஜகம் தொடர்கிறது...

LTTE'க்கு support செய்யும் மக்களே.... கொஞ்சம் இந்த news'ஐயும் பாக்குறீங்களா?

20 killed in Colombo blasts

Blast shows change in LTTE tactics

எனக்கு ஒன்று தான் புரியவில்லை... அது என்ன... LTTE உடன் நடக்கும் சண்டையில் Srilankan govt bomb போடும் பொழுது தமிழர்கள் இறந்தால் மட்டும் மல்லுக்கட்டும் LTTE ஆதரவாளர்கள் இந்த மாதிரி LTTE'இன் retaliation attack'ஆல் civilians இறந்தால் மட்டும் மௌனமாக இருப்பது ஏன்? எல்லா உயிரும் உயிர் தானே? அப்பாவி சிங்களர்கள் இறந்தால் அதைப் பற்றி கவலை இல்லையா?

LTTE ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கம்(தமிழர்களுக்கும் சம உரிமை வேண்டும்) நல்லதாக இருந்தாலும், போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, தனி ஈழம் என்ற வறட்டுப் பிடிவாததிற்க்கும், அரசியல் பழிவாங்குதல்களுக்கும், தனக்கு வேண்டாதவர்களைப் போட்டுத் தள்ளவும், சிறுவர்கள் கையிலும் ஆயுதங்களைக் கொடுக்கவும் என்று தடம் புரண்டது தான் மிச்சம்.

ராஜீவ் காந்தியைக் கொன்று, (அவர் ஒன்றும் காமராஜர் போல் உத்தமர் இல்லையெனினும்) அதன் மூலம் இந்தியாவில் எப்பொழுதும் நிலையில்லா அரசுகளை ஏற்பட வைத்து, இந்தியாவின் வளர்ச்சியை சில வருடங்கள் பின்னோக்கித் தள்ளிய LTTE'க்கு கவிதையாம், poster'ஆம்... கருமம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!!

சிங்கள அரசுக்கு இருப்பது(இருந்தது?) மட்டும் இனவெறி அல்ல... தமிழ், தமிழர் என்று சொல்லி அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் LTTE'க்கும், அதன் supporters'க்கும் இருப்பது கூட இனவெறி தான்! கேட்டால் கலைஞர் போல், "இனவெறி தமிழுக்கு என்றால் வரவேற்போம்" என்பார்கள்... சுஜாதா பாணியில் சொல்வதானால், மனிதத்தை விட தமிழ் உயர்ந்தது என்று நினைக்கும் இவர்களைப் பசித்த 'புலி' உண்ணட்டும்.

Saturday, November 24, 2007

விஜயகாந்தின் மேல் உள்ள நம்பிக்கை வலுக்கிறது!!

www.dinamani.com->archives->18th Nov 2007->DinamaniPlus->Arasiyal->Manasaatchi thaan enathu kolgai, vazhikaatti

(ஏன் தினமணி ஒரு fixed link தருவதில்லை என்று தான் புரியவில்லை. Full architecture'ஐயும் மாற்ற வேண்டும் தான். ஆனால் படிப்பவர்களுக்கு link கொடுக்க easy'ஆக இருக்குமே!)

முதல்ல நான் விஜயகாந்தை movies'ஓட influence'னால அரசியல்ல ஒரு comedian'ஆகத் தான் பாத்துட்டு இருந்தேன். ஆனால் அவரோட views எல்லாம் உண்மைலயே ரொம்ப தெளிவா இருக்கு. முக்கியமா "நமது தேவைகள் AC room'உம், car'களும் அல்ல... உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், செய்ய தொழில், ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அடிப்படை வசதிகள் தான்", "விவசாயத்துக்கு அதிக மானியம் கொடுக்கப் பட வேண்டும். அதே நேரம் விவசாயிகளைப் பாதிக்காத சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுவதை வரவேற்கவும் வேண்டும்.", etc... போன்ற கருத்துக்கள்... உண்மையில் சபாஷ் சொல்லத் தோன்றுகிறது... எனக்குத் தெரிந்து வேறு எந்த அரசியல்வாதியும் இந்த மாதிரி விவசாயிகளையும் கழட்டி விடாமல், SEZ'ஐயும் பலி கொடுக்காமல் பொதுவான ஒரு கருத்து சொன்ன மாதிரி தெரியவில்லை. எல்லோருக்கும் தெரிந்த கருத்து தான். ஆனால், யாரும் செயல் படுத்தத் தான் வரவில்லை. எனக்கு என்னமோ, விஜயகந்த்க்கு ஒரு chance குடுத்துப் பார்க்கலாமோ என்று தான் தோன்றுகிறது!! ஆனால், இந்த போலி திராவிடக் கட்சிகளின் கையில் சிக்கியுள்ள நமது மக்கள், இந்த மாற்றத்தை practical ஆக்குவார்களா என்று தான் தெரியவில்லை!!ஆக்க வேண்டும்! இப்போது இருக்கும் திராவிடக் கட்சிகளின் ஒரே மாற்று விஜயகாந்த் தானே!!

Thursday, November 15, 2007

Roads -- Nov 2007 PIT புகைப்பட போட்டிக்கு...

Ref: http://photography-in-tamil.blogspot.com/2007/10/pit_31.html

தலைப்பு Roads என்று இல்லாமல் பாதை என்று இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் creative'ஆக fotos எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். :-)

முதல் இரண்டும் போட்டிக்கு... (தயவு செய்து fotos'ஐ click பண்ணி வேறு window'வில் பார்க்கவும்... எனது blog'ன் backround image'ல் படங்கள் சரியாகத் தெரிய மாட்டங்குது!!)

இது மும்பை CST அருகில்.... (முழுவதும் shadows increase செய்தது)Original img: http://picasaweb.google.com/luvathi/Mumbai02/photo#5108216043115136658





















இது சென்ற வாரம் கொடநாடு viewpoint'ல் இருந்து திரும்பும் போது எடுத்தது... (just made it as B&W)





















அடுத்தது Murud Janjira போகும் போது எடுத்தது. (again increased the shadows a little bit)Original img: http://picasaweb.google.com/luvathi/MurudJanjira/photo#5108658042494541682
















இது கோயம்புத்தூரிலிருந்து வால்பாறை போகும் வழியில் எடுத்தது... (கொஞ்சம் crop செய்து shadows increase செய்திருக்கிறேன்) Original img: http://picasaweb.google.com/luvathi/Vaalpaarai/photo#5085836581338982354
















கடைசியாக சென்ற வாரம் ஊட்டி போன போது, try பண்ணி பண்ணி, தோற்றுப் போன shot'களில் ஒன்று.... (croped the img and increased the shadows a little)





Tuesday, November 13, 2007

விடுதலைப்புலிகளின் அராஜகம்...

http://www.dinamani.com/ -> ஆவணங்கள் -> 12th Nov 2007 -> தமிழகம் -> விடுதலைப்புலிகள் மீண்டும் டீசல் பறிப்பு.

விடுதலைப்புலிகள் மீண்டும் diesel பறித்துச் சென்றிருக்கிறார்கள், ராமேஸ்வரம் மீனவர்களிடமிருந்து. ராணுவ உடையில் வந்து பறித்தது மட்டுமல்லாமல், கண்ணாடி bottle'ஐயும் வீசிவிட்டு, இனிவரும் காலங்களில் oil & petrol கொடுத்து விட்டுத் தான் மீன் பிடிக்க வேண்டும் என்றும் மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

LTTE'ஐப் பொறுத்த வரை ஈழத்துத் தமிழர்கள் மட்டும் தான் வாழ வேண்டுமா? மற்றவர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும் இவர்களின் செயல்களுக்கு LTTE ஆதரவாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அவர்களுக்கு என்ன... எப்பொழுதும் இலங்கை அரசு தவறு செய்தால் மட்டும் தான் கண்டிக்கத் தெரியும்! இந்த செயல்களுக்கு வாய் மூடி மௌனமாகத் தானே இருக்கப் போகிறார்கள்!! இல்லையென்றால் LTTE'க்கு வேறு வழி இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். அப்படிப் பார்த்தால் இலங்கை அரசின் சில செயல்களையும் இதே போல் நியாயப் படுத்திவிட முடியும்.

நமது இந்திய மக்கள் எக்கேடோ கேட்டுப் போகட்டும், ஈழத் தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற சித்தாந்தத்துடன் போராடும் LTTE'க்கு ஆதரவாக இங்கு பொதுக்கூட்டம் போடுவதும், கவிதை எழுதுவதும் வெட்கக் கேடு!!

Tuesday, November 06, 2007

செல்லாவிற்கு மறுமொழிகள் -- Vijay TV நீயா நானா?

எனக்கு forward வந்தது... செல்லாவின் latest blog... முதலில் அந்த link... http://osaichella.blogspot.com/2007/11/blog-post_05.html

கீழே உள்ளவை என் மறுமொழிகள் ...

எனக்கு இப்பவும் ஒண்ணு மட்டும் புரியவே மாட்டங்குது … அந்த நிகழ்ச்சியில அந்த பொண்ணு பேசிய விதம், நிச்சயமா கண்டிக்கப் பட வேண்டியது. பொளேர்னு அறையணும் போல தான் தோணிச்சு!! எத்தனையோ நிகழ்ச்சிகளில், ஏதாவது யாராவது mention பண்ணினால், அந்த வார்த்தையை மட்டும் cut செய்யும் Vijay TV(இதற்கு முன் எத்தனையோ முறை நீயா நானாவில் கூட இது நடந்திருக்கிறது!), இதையும் cut பண்ணி இருக்கலாம் சரி… அதை விடுங்கள்..

But, எனக்கு தெரிஞ்சு எத்தனையோ பேரு சாதி மாறி கல்யாணம் பண்றதை ஆதரிக்கலை. அந்த programme’லேயே ஒரு அம்மா, தன்னோட பையனை ஜாதி மாத்தி திருமணம் செய்ய மாட்டேன். ஏன்னா, என்னோட ஜாதி எனக்கு உயர்ந்ததுனு எல்லாம் பேசினாங்க. ஒரே வித்தியாசம், தன்னோட ஜாதி எண்ணங்கிறதை அவங்க சொல்லலை. இந்த ஒரு காரணத்தை வச்சே, again Brahmins மேல தாக்குதல் டுக்குறது எந்த விதத்துல நியாயம்னு எனக்கு புரியலை. மத்தவங்க பேசுறதையே Brahmins’ம் பேசுனா, ஏன் அவங்களை மட்டும் கண்டுக்கிறாங்க? ஏன், தங்களுக்கு சாதகமா, மத்த ஜாதிகளை சேர்ந்தவங்க பேசுறதை ஓரம் கட்டுறாங்க?? அதுவும் இந்த மாதிரி ஒரு பொண்ணு பேசுனதை மட்டும் வச்சி, total'ஆ மறுபடியும் Brahmins மட்டும் தான் இப்படின்னு பேசுறதுல என்ன நியாயம் இருக்கு?

அது போகட்டும்… எங்க வீட்டுல இந்த programme அப்போ என் நண்பன் ஒருவனால் கேட்கப் பட்ட ஒரு கேள்வி... “நான் தமிழனா பிறந்ததற்கு, பெருமை படுகிறேன்னு ஒருத்தன் சொன்னா தப்பு இல்லை. நான் ____ ஜாதியை சேர்ந்தவனா இருக்கப் பெருமைப் படுகிறேன்னு சொல்றது மட்டும் தப்புன்னு சொல்றது எந்த வகையில் நியாயம்?"

ஞானி சொன்ன மாதிரி, “நான் இந்தியன்னு சொல்லிக்கிறதே கூட, ஒரு வகையில் கொஞ்சம் முன்னேறிய ரீதியில் ஜாதி பற்றி பேசுவது தான்.

மனுஷங்களை மனுஷங்களா பாக்காத வரைக்கும், அந்த பொண்ணு, அந்த lady மாதிரி சுய தம்பட்டம் அடிக்கிறவங்களும் இருப்பாங்க. இந்த Chella மாதிரி, அதை(மட்டும்) கண்முடித் தனமா குறை சொல்றவங்களும், அதை ஏதோ Brahmins மட்டும் தான் செய்யிற மாதிரி ஒரு மாயை create பண்ணி forward செய்யிறவங்களும் இருக்கத் தான் போறாங்க. :-)

Wednesday, October 10, 2007

உணவுப் பொருட்கள் - Oct 2007 PIT போட்டிக்கு

Ref: http://photography-in-tamil.blogspot.com/2007/09/pit_30.html

முதல் இரண்டும் போட்டிக்கு...

ம்... முதல்ல நம்ம ஊரு இட்லி...




















இரண்டாவது, அழகாக அடுக்கி வைக்கப் பட்ட நெல்லிக்காய்.



இனி வருபவை பார்வைக்கு...

வெள்ளறி...















ஆப்பிள்





















மாதுளை



















திராட்சை






















இளநீர்






















தோசை

























கொத்து பரோட்டா - Before





















கொத்து பரோட்டா - After





















Halfboil





















அடுத்து Poha - Maharashtra உணவு




















Shira - Maharashtra உணவு


















சாபூதானா வடை - Maharashtra உணவு






















Baakri ரொட்டி - Maharashtra உணவு

Monday, October 08, 2007

கற்றது தமிழ் -- கற்றது படம்

சில நாட்கள் முன்பு என் நண்பன் Suku'ம் நானும் பேசிக்கொண்டிருந்தோம். Software industry'ன் இந்த அபரிமிதமான வளர்ச்சி எங்கு கொண்டு போய் விடும் என்று! இந்த படத்திலேயே ஒரு dialogue வரும்... "முந்தில்லாம் சென்னை மாதிரி நகரத்துல குறைந்த பட்ச வருமானம் 2,000 ரூபாய், அதிகபட்சம் 20,000. இப்போ, குறைந்த பட்ச வருமானம் அதே 2,000 தான், ஆனா அதிகபட்சம் 200,000".இந்த dialogue தான் படத்தின் கதை, theme எல்லாமே.


இந்த படத்தின் Script பற்றி சொல்ல வேண்டுமானால் -ve aspect'ல் 'குழப்பமான' என்று சொல்லலாம்... அல்லது +ve aspect'ல் 'brilliant'ஆன என்றும் சொல்லலாம். :-) முதலில் Flashback போல் ஆரம்பித்து, பின் அந்த flashback ஆரம்பித்த இடத்தில் இருந்தே மறுபடி கதையைத் தொடர்ந்து(Flashback'கிற்குள் Flashback!), அதன் பின் Flashback & current incidents என்று மாற்றி மாற்றி காட்டி, மறுபடி அந்த தொடர்ந்த இடத்திற்க்கே வந்து முடிப்பது, தமிழ் cinema'விற்க்குப் புதுசு. ஒரு இரண்டு வார்த்தை பக்கத்தில் திரும்பி பேசினால், கதையின் தொடர்ச்சி புறிபடாமல் போவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். இதற்குப் பக்க பலமாய் இருப்பது characterisation.

ஜீவாவின் charater தான் படத்தின் உயிர் நாடியே. பொதுவாக நான் reviews எழுதும் போது, நடிப்பு பற்றி எழுதுவது இல்லை. ஆனால் இங்கு என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. ஜீவாவின் நடிப்பு நிச்சயம் அவரை ஒரு புது தளத்திற்க்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதுவும் ஒரு BPO பையனைப் பிடித்து வைத்துக் கொண்டு அவர் போதும் ஆட்டம்.. wow!! அடுத்து அஞ்சலி... புதுமுகமாம். சூடம் அடித்தால் கூட நம்ப முடியாது. :-) (I fell in love with her... know???) :-) அப்புறம், அந்த குட்டிப் பையனை விட, அந்த குட்டிப் பெண் ரொம்ப கவர்கிறாள். "நெசமாத் தான் சொல்றியா?" என்று மறுபடி எப்பொழுது கேட்பாள் என்று ஏங்க வைக்கும் நடிப்பு!! :-) படத்தில் மற்றொரு குறிப்பிட்டு சொல்ல வைக்கும் பாத்திரம் தமிழ் வாத்தியாராய் வரும் அழகம் பெருமாள். புதுப்பேட்டைக்குப் பின் மற்றொரு அழகான role. மனுசர் சும்மா பூந்து விளையாடிட்டார்.

இவர்கள் அத்தனை பேரின் charaterisation'ம் அருமை. ஜீவாவிற்க்குள் குடிகொண்ட முரட்டுத் தனத்தை(அல்லது இயலாமையை) முழுவதும் justify பண்ண முடியாததெனினும், அதற்க்காக முயன்றதுக்குப் பாராட்டலாம். கமல், KB படங்களைப் போல் சின்ன சின்ன charaters'ஐயும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் ராம்(director). அந்த roommates, doctor, BPO guy, etc.

பொதுவாக பாடல்கள் ஒரு படத்தின் வேகத்தைக் குறைப்பவையாகவே கருதப்படுவதுண்டு. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. Script எழுதி முடித்த பின் தான் வியாபார நோக்கத்திற்க்காகப் பாடல்களைப் புகுத்துவார்கள். இந்த படத்தில் அந்த மாதிரி எதுவுமே கிடையாது. பாடல்கள் அவ்வளவு அழகாக script உடன் இணைந்திருக்கின்றன. சொல்லப்போனால், பாடல்களைத் தூக்கி விட்டால், script முழுமையே அடையாது. :-)

சில(சொல்லப்போனால் பல) scenes எல்லாம் உண்மையிலேயே room போட்டுத் தான் யோசித்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கின்றன. முதலில் படம் ஆரம்பிக்கும் போதே இது மற்ற படங்களைப் போல் இல்லை, என்னமோ வித்தியாசமாய் இருக்கிறது என்பது புரிந்து போய் விடுகிறது. அந்த வித்தியாசத்தை இறுதி வரை கொண்டு போனதே director'ன் வெற்றி தான்.

"வாழ்க்கைல நிறைய சின்ன சின்ன அழகான விஷயங்கள் நாம கவனிக்காமலே நம்மளை விட்டு கடந்து போய்டுது" போன்ற அழகான வசனங்கள் படத்தின் மற்றொரு முக்கியமான பலம்.

தமிழ் cinema industry'யில் இளையராஜா, ARR'க்கு அடுத்து Re-recording'ல் பட்டையைக் கிளப்புவது யுவன் தான்(நல்ல directors அமைந்தால்!!). So, இந்த படமும் miss ஆகவில்லை. பாடல்கள், அதில் instruments கையாண்ட விதம் எல்லாம் இளையராஜாவையும் ARR'ஐயும் கலந்து கொடுத்தது போல் இருந்தது. "பறபற பட்டாம்பூச்சியும்", "பறவையே எங்கு இருக்கிறாயும்" மனத்தை விட்டு அகல மறுக்கின்றன.

Director ராம், Balu Mahendra'வின் assistant என்பது cinematography'வைப் பார்த்தாலே தெரியும். கதிர் என்னும் cinematographer. நானும் தான் Maharashtra போனேன், Rajasthan போனேன். ஆனால் இந்த மாதிரி இடங்களை எங்கு தான் பிடிக்கிறார்களோ... என்று தான் முதலில் நினைத்தேன். பின்பு தான் புரிந்தது. அது, பார்க்கும் பார்வையில் மட்டும் இல்லை. படம் பிடிக்கும் camera'வும், camera'வைப் பிடிக்கும் கையும் காரணங்கள் என்று! :-)

Editing -- Sreekar Prasad. இந்த மாதிரி, கொஞ்சம் குழப்பமான script'க்கு இந்த மாதிரி தேர்ந்த editor இருந்தால் தான் வேலைக்காகும். ஆனால் climax'ன் கடைசி 20 min'ஐத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கத்திரி போட்டிருந்தால், படம் 'ரொம்ப' அழகான படமாக வந்திருக்கும்.இப்பொழுதோ, director புலம்புவது போல் ஆகி விட்டது. அந்த bus'ல் இருவரும் செல்லும் போதே முடிததிருக்கலாம்.

சில இடங்களில் ரொம்ப apt'ஆன editing with the song sequences. ஜீவா ஒரு disappointed state'ல் அஞ்சலியை cycle'லில் கூட்டி வருவார். ஒரு இடத்தில் support'காக ஜீவாவின் தோளைப் பிடிப்பாள்... உடன் "முதல் முறை வாழப் பிடிக்குதே" என்ற lines வரும். "முதல் முறை வெளிச்சம் பிறக்குதே" என்ற lines வரும் பொழுது, அந்த train ஒரு இருண்ட tunnel'லில் இருந்து வெளியே வரும்.
ஜீவா வளர்ந்த பின், எல்லா hostel மாணவர்களும், bag எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்புவார்கள். அது 12-ம் வகுப்பு என்பது, பின்னால் கொஞ்சம் out of focus'ல் இருக்கும் கதவில் எழுதி இருக்கும் 12A'ஐ வைத்துக் கண்டு பிடிக்கலாம். இது போல் இன்னும் நிறைய scenes.... நிறைய எழுத வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால், அவ்வளவையும் எழுதினால் இன்னும் இரண்டு பக்கத்திக்கு மேல் வேண்டும்.

மொத்தத்தில், climax-ல் கடைசி 20 நிமிடம் தேவையில்லை என்றாலும், script'காக இன்னொரு முறை பார்க்கணும். Cinematography'க்காக மற்றொரு முறை பார்க்கணும். Re-recording'காக மற்றொரு முறை பார்க்கணும். Editing'காக மற்றொரு முறை பார்க்கணும். கடைசியாக Anjali'காக கட்டாயம் மற்றுமொரு முறை பார்க்கணும். :-)